பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

கோபாலபுரம் கோபாலபுரம் ஒரு சிற்றூர். சிறிது இடிந்த சிவன் கோயிலின் கோபுரம் ஊரின் கீழ்ப்புறத்திலிருக்கும் மாந்தோப்பின்மீது ஸ்தாவின் திருப்பத்திலிருந்து பார்த்தால் தெரியும். சாயங்காலத்தில், அதாவது அஸ்தமிக்கும் செங்கோளமான சூரியனின் கிர ணங்கள் மொட்டைக் கோபுரத்தின் மீதும் மாந்தோப்பின் மீதும் விழுந்து பளபளக்கும் சமயத்தில் நான் ஏன் சைத்ரி கனாகப் பிறந்திருக்கக் கூடாது என்று படும். ஊருக்கும் அந்த ரஸ்தாவுக்கும் ஏறக்குறைய அரை மைல் தூரம் இருக்கும். கோபுரத்தைத் தவிர அங்கு மனித வாழ்வின் சின்னங்களைக் காண்பதே அருமை. தூரத்து மைதானத்தில் இரண்டு மூன்று எருமையோ, ஆட்டுக்குட்டியோ மேய்வதைப் பார்ப்பதும், மாட்டுக்கார் னின் குரல் கேட்பதும் விதிவிலக்கு. " வாழ்க்கையில் கசப்புற்றவர்களுக்கும், தனிமை என் றும், காதல் என்றும், அழகு என்றும் அர்த்தமில்லாமல் பேசும் கவிஞர்களுக்கும் அவ்விடத்தில் மன நிம்மதி கிடைக்கும். நானும் அவ்வூரில் தங்கியவன்தான். அதாவது ஒரு காலத்தில் என்னை அவ்வூர்க்காரர்கள் தெரிந்து கொள்ளு வார்கள். ஆனால் இப்பொழுது... அது பெருங்கதை. மனிதன் தெய்வ சிருஷ்டியின் சிகரம் என்பது சாஸ்தி ரக்காரரும் விஞ்ஞானிகளும் ஏகோபித்துப் பாடும் முடிவு. கான் கவனித்த வரை, அந்த மாதிரிக் கேவலமான சிருஷ்டியைப் படைத்த பிறகு, கடவுளுக்கு உணர்ச்சி ஏதா