பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

கோபாலபுரம் 195 வது இருந்தால், வெட்கத்தினால் தூக்குப் போட்டுக்கொண் டிருக்க வேண்டும் என்றுதான் கூறுவேன். மனிதனாவது ! கடவுளாவது ! சீச்சீ ! சுத்த அபத்தம்! இதில் தெய்வம் தன்னை வழிபட வேண்டும் என்று மனி தனை எதிர்பார்க்கிறதே அதைப்போல் முட்டாள் தனம் வேறு உண்டா? நான் மட்டும் கடவுளாக இருந்தால், கட்டாயம் இந்தச் சிருஷ்டித் தொழிலை நெடுங்காலத்திற்கு முன்பே விட்டுவிட்டுத் தூக்குப் போட்டுக் கொண்டிருப் பேன். என்ன மனிதன் சீ ! அன்றைக்கு நடந்தது எல்லாம் நேற்று நடந்த மாதிரி இருக்கிறது. ...... அதற்கு முன்பு கோபாலபுரம் என்னமாக இருந்தது ல் லக்ஷ்மி ஒருத்தியே போதுமே ஊர் நிறைந்தாற்போல் இருக்க!சாயங்காலத்திலே சிவன் கோயில் கிணற்றில் ஜல மெடுக்க வரும்போது தமிழ்ப் பெண்மையின் இலட்சியம்... சீச்சீ,அவளும் நாற்றமெடுக்கும் தசைக் கூட்டந் தானே! பெண்மையாவது இலட்சியமாவது/அவள் என்ன செய்வாள்?... எப்பொழுதும் சிரித்த கண்கள், புன்னகை ஒளிந்த அதரங்கள். பண்ணை ஐயரின் மகள் என்றாள் கவலை என்னத்திற் கிருக்கிறது? மாமரத்து மோட்டுக் கிளைக் குயில்கள் போல் குதூகலமாக இருந்தாள். குயில் களுக்குத் தம் மோகனக்குரல் - இன்பத்தால் மற்றவரைத் துன்பப்படுத்துவது தெரியுமா? அப்படித்தான் அவளுக் கும். வாழ்க்கை, இன்பம் என்ற பெருங் களியாட்டமாகச் சென்றது. அப்பொழுது நான் அங்கே போய்த் தொலைந்தேன். வேறு எந்த ஊராவது என் மனத்தில் தோன்றக்கூடாதா? எவனோ ஒரு முட்டாள், "வாழ்க்கை இன்பத்தின் சிகரத்தை அனுபவிக்க வேண்டுமானால் திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரவருணிக் கரையிலிருக்கும் சிற்றூர்களில் தங்க வேண்டும், அதிலும் முக்கியமாகக் கோபாலபுரத்தில் வாழ வேண்டும்," என்று எழுதி வைத்தான்.நானும் முட்டாள் தனமாக அங்கே சென்றேன். போன ஒரு மாசம், கொஞ்சங்