பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

துன்பக் கேணி 21 பதிலாக வசை மொழிகள் கிடையாது போனால் அவள் அதிர்ஷ்டம். அங்கிருக்கும் கூலிகளில் பலர் அவளுக்குக் கள்ளுத் தண்ணி வாங்கிக் கொடுத்து அவளுடைய தயவை எதிர் பார்ப்பது என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. . சில சமயம் மருதிக்கு, ஊரைப் பார்த்துப் போய்விட லாமா என்ற எண்ணம் தோன்றும். ஊரில் போனால் அப்பன் வீட்டில்தான் இருக்க வேண்டும். வெள்ளைய னிடம் செல்வதற்கு மனத்தில் எவ்வளவு ஆசை இருந்தும், அங்கு செல்வதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. . இங்கு வந்த சில காலத்திற்குள் அவளுடைய உருவம், அதன் யௌவனக் களை எல்லாம் மாறிவிட்டன. பழைய மருதியல்ல: வாசவன்பட்டியில் இருந்த அவளுடைய சிரிப்பும் பேச்சும் பழங் கதை யாகிவிட்டன. அன்று விடியற்காலம் வெள்ளையன் குழந்தையை எடுத்துக்கொண்டு சென்ற காட்சி அவள் கண்முன் அடிக்கடி தோன்றும். குழந்தை, குழந்தை, குழந்தை! இதுதான் எப்பொழுதும் நினைப்பு. வெள்ளைச்சி இப் பொழுது என்ன செய்துகொண்டிருப்பாள், பேசுவதற்குப் படித்திருப்பாளா?- என்பதெல்லாம் கனவு. உள்ளுறப் பூச்சி யரித்தது மாதிரி நினைவுகள் குடைய ஆரம்பித்துவிட்டால், பொக்கான தேகம் என்னதான் எதிர்த்து நிற்க முடியும்? செத்தால் வாசவன்பட்டியில் தான் சாகவேண்டும் என்ற ஆசை அதிகரித்துவிட்டது. ஆஸ் இப்பொழுது மருதிக்குக் கால் கைகளில் புண். அத்துடன் குத்திருமலும் சேர்ந்துகொண்டது. பத்திரி மருந்துத் தண்ணியை எத்தனை நாள் குடித்தும் பயன் இல்லை. வைத்தியர் மருந்தூசி குத்தவேண்டும் என்றார். அது கொஞ்ச நாள் கங்காணிச் சுப்பன் தயவில் நடந்தது; அதுவுமல்லாமல் அவளுக்குப் பக்கத்து வீட்டில் இருந்த பேச்சியும் கூட இருந்து உதவிசெய்தாள் அது எப்படியிருந்தாலும் காலையில் தேயிலைக் கொழுந்து பறிக்கச்செல்வது தடைபட்டுவிடக் கூடாது. 2