பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

216 புதுமைப்பித்தன் கதைகள் நாம் என்ன பண்ணமுடியும்!... ஆச்சி திரேகம் கல்லுன்னா கல்லுத்தான். எண்ணைக்காவது ஒருநா மண்டை டிண்ணு தலையெச் சாச்சிருக்காளா?...அந்தப் பெரிய டாக்டரு இருக்கானே - அவன் எம்டன்தான்!... அவனே அவ்வளவுதான்னுட்டான்!" என்று வாசாமகோசரமாக விஷயத்தைச் சொல்லி, தேறுதலும் சொல்ல ஆரம்பித்தார் முதலில் எழுந்தவர்... அப்பொழுதுதான் எழுந்த சுந்தரம் பிள்ளை, நெற்றி யில் விபூதியை எடுத்துப் பூசிக்கொண்டே, போன மாசமேதான் சுப்பு பிள்ளை அண்ணாச்சி சொல்லலே, ஆச் சிக்கு ஒரு கண்டமிருக்குன்னு!...நானும் அண்ணைக்கி விளை (விளையுமிடம்) யைப் பாத்துட்டு வரப்போ பேசிக் கிட்டுத் தானே வந்தேன்...எல்லாம் வெள்ளிக்கிளமை களிஞ்சாத்தானின்னார்... காலன் வாரதுக்கு கணக்கிண் ணும், நேரமிண்ணும் உண்டுமா?"...என்று சொன்னார்... வைரவன் பிள்ளை யோசனையைச் சுடலையின் மற் றொரு சங்கொலி கலைத்துக் குழப்பி அதனுடன் ஒன்று பட்டது. அதற்குள் நன்றாய் விடிந்துவிட்டது. வீட்டினுள்ளிருந்த நான்கு வயதுப் பைய னொருவன் இடை அரைஞாண் கயிற்றில் மூலை மட்டும் சொருகிய பட்டுக் கரைத் துண்டு ஒன்றைப் பிரம்மப் பிரயத்தனம் செய்து மேலே இழுத்துப் போட்டும் முக்கால்வாசிப் பாகம் புழுதியில் புரள, வெளியே வந்து குறட்டின் மேல் ஏறினான். வைரவன் பிள்ளை உணர்வற்ற நிலையிலே, அவனை ஒரு கையால் அணைத்தார் அவர் பக்கம் ஒண்டிக்கொண்டு அவரை அண்ணாந்து ஏறிட்டுப் பார்த்த வண்ணம், 'நாந்தான் ஆச்சிக்கு நெய்ப் பந்தம் பிடிச்சேனே!" என்று தன் திறமையை விளக்கிக் கொண்டான் சிறுவன். "பயலெப் பாருங்களேன் !...... ஏலே, ஓங்க ஆச்சியெ எங்கடா?" என்றார் சுந்தரம் பிள்ளை.