பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22 புதுமைப்பித்தன் கதைகள் அதில் கங்காணிச் சுப்பன் கறார் பேர்வழி. உதை, அடி அப்புறம் வசவு முதலியவை சாதாரணத் தண்டனைகள். இதைவிடக் கொடுமையானது அபராதம் பிடித்து வாரக் கூலியில் மண்ணைப் போடுவது. அன்று ஆஸ்பத்திரிக்குச் சென்றுவிட்டு கொழுந்து எடுக்கப் போவதற்குச் சற்று வந்து. நேரமாகி விட்டது. கூடையைத் தோளில் போட்டுக்கொண்டாள். கங்காணிச் சுப்பன் சுற்றிப் பார்த்துவரும் இடத்தின் பக்கம் அல்லாமல் வேறு பக்கமாகச் செல்லவேண்டும் என்று பயந்துகொண்டே, தோட்டத்தின் மேல் மாகச் சென்று, கொழுந்துகளை அவசர பக்க அவசரமாகப் பறித்துக் கொண்டிருந்தாள் மருதி. அப்பக்கத்தில் தேயிலைச் செடிகள் கொஞ்சம் உயரமாகச் செறிந்து வளர்ந்திருந்தன. மறு பக்கத்தில் தனக்கு உதவியான பேச்சியும் கங்காணிச் சுப்பனும் இருப்பதை அவள் பார்க்கவில்லை. அவர்கள் இருந்த நிலைமை அங்கு சர்வ சாதாரணம். ஆனால், இவள் நிற்பதைச் சுப்பன் பார்த்துவிட்டான். அவள் தன்னை ஒற்றுப் பார்க்கிறாள், அதனால் ஏதேனும் சச்சரவு வந்து துரை காதிற்கு எட்டிவிடும் என்ற பயம். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதிரியின்மீது பாய்வது உயிர்ப் பிராணிகளின் இயற்கைக் குணம்.சுப்ப னும் ஒரு ஜீவன் தானே! சுப்பன் அவள்மீது பாய்ந்து. இரைந்துகொண்டே, உதைக்க ஆரம்பித்தான். மருதி, பேயோ என்ற நினைப்பில், கதிகலங்கிக் கல் லாக நின்றாள். சுப்பன், கூடையைப் பிடுங்கி,இலைகளை அவள் தலை வழியாகக் கொட்டி, நெஞ்சில் ஒரு மிதி மிதித்தான். கூடை யில் இருந்தவை கொழுந்துகள் அல்லாமல் பெரும் பாகம் முற்றிய இலையாக இருந்ததைக் கண்டதும், சுப்பனின் கட்சி இன்னும் வலுத்தது. கையில் இருந்த கழியினால் நன்றாகச் சாத்திவிட்டு, அபராதம் போடுவதற்கு நேராக ஆபிஸைப் பார்த்து நடந்துவிட்டான்.