பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

மனக் குகை ஓவியங்கள் 221 பசியால் தவிக்கும் 'கல்லினுள் சிறு தேரை ' தென் பட்டது. அதை கோக்கி விரைந்து சென்றார். து III யம்புரி. மார்க்கண்டச் சிறுவனுக்காகப் பரிந்துகொண்டு வந்த சிவபிரான் கையில் தோல்வியுற்று, தர்மராஜன் பொழுதுதான் திரும்பி வந்திருக்கிறான். அப் தனது தர்மாசனத்தில் உட்காரவும் அவனுக்கு அச் சம் தயங்குகிறான். ஆசனத்தடியில் விடாப்பிடியாக உட்கார்ந்துகொண்டு முரண்டு செய்துகொண்டிருந்த நசிகேதக் குழந்தை, "மரணம் என்றால் என்ன?" என்று மறுபடியும் தன் மழலை வாயால் கேட்டது. எத்தனையோ தத்துவங்களைச் சொல்லிப் பார்த்தான். குழந்தையை ஏமாற்ற முடியவில்லை. தன் ஒற்றைக் கேள் வியை வைத்துக்கொண்டு அவனை யுகம் யுகமாக மிரட்டி வருகிறது, அக்குழந்தை. தோல்வியின் சுபாவமோ என்னவோ! "மனிதர்கள் என்னைக் கண்டு ஏன் மிரளுகிறார்கள்? ஞ்சுகிறார்கள்? நான் உதவி செய்யத்தானே செல்லு கிறேன்? எனக்குப் பயந்து என்னையும்விடப் பெரிய எம் னான சங்கரனிடம் சரண் புகுந்தாவது என்னை விரட்டப் பார்க்கிறார்களே! இது என்ன புதிர்? என்னைக் கண்டு பயப்படுவதற்கு என்ன இருக்கிறது?" என்று அவனது ஏக்கப் படுதாவில் நினைவு - அலைகள் தோன்றி விரிந்தன. அன்றுதான் அவன் தன் தனிமையை முழுதும் அறிந்தான். அப்பொழுதுதான் கிங்கரர் இருவர் தன்முன் கொண்டு நிறுத்திய மனித உயிரைப் பார்த்துத் தன் அந்த ரங்கக் கேள்வியை வாய்குழறிக் கேட்டுவிட்டான்.