பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

அதுவரை மனிதன் காலடிச் சுவடே படாதபிரதேசங் கள் வழியாகக் குருவும் சிஷ்யனுமாக இருவர் சென்று கொண்டிருக்கின்றனர். இருவரும் நடந்துகொள்ளும் மாதிரி நனத் தவிர மற்றபடி வித்தியாசம் தெரியவில்லை. இருவரும் ஒரே வயதினர். ஒரே விதமான நரை திரை: ரொம்ப நெருங்கிக் கவனித்தால் ஒருவர் சொல்வளவில், சிறிது இளையவர் மாதிரித் தெரியும், ஆனால், முகத்தில் சிந்தனை யின் அசைவு ஏற்படும் பொழுதெல்லாம்,மூப்பு தானே வெளிப்படும். இருவரும் ஹிமய சிகரப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாலைவனம் வழியாகச் செல்லுகின்றனர். உயிரைக் கருவறுக்கும் குளிர். தூரத்திலே எட்டாத இலட்சியம் போல நிற்கிறது கைலையங்கிரி. கால்கள் அப்பொழுதுதான் விழுந்த பனிச்சகதிகளில் அழுந்துகின்றன; சில இடங்களில் பனிப்பாறைகளில் வழுக்குகின்றன. பார்வையின் கோணம் கதிக்க விழத்தக்க ஒரு திருப் பத்தில் வந்து நின்றார் குரு. "அதோ தெரிகிறது பார்த்தாயா கைலயங்கிரி, உயர்ந்து நிமிர்ந்து கம்பீரமாக வானைக்கிழித்துக்கொண்டு! சிகரத் திலகம் போல அதன் உச்சியில் வான் தகட்டில் தெரிகிறதே ஒரு நட்சத்திரம்,- பிரகாசமாக.- அதைப் போலத்தான் இலட்சியம், தெய்வம்!" என்று சுட்டிக் காட் னார் குரு. கண்களில் சத்தியத்தைக் கரை கண்ட வெறி ததும்பி வழிகிறது.