பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38 புதுமைப்பித்தன் கதைகள் வெள்ளைச்சியை மெதுவாக அந்தப் பக்கமாக அழைத்து வர, அவளுடன் கூட அலையும் சிறு பெண் களுக்குக் காசு கொடுக்கப்பட்டது. அவர்கள் அப்போதைக்கப்போது சின்னானின் நட்பைப் பெற்றவர்கள். இத்தனை நாளும் அகப்படாத வெள்ளைச்சி யைப் பிடித்துக் கொடுப்பதில் அவர்களுக்குக் கொஞ்சம் குதூகலம்! ஏற்பாட்டின்படி நடந்தது. சின்னான் ஸ்டோர் மானேஜருடன் அங்கு வந்திருந்தான். வெள்ளைச்சியைக் கொழுந்து பறிக்க வைத்துவிட்டு, மெதுவாக விட்டார்கள் கூடவந்த சிறுமிகள். நழுவி வேறு விஸ்தரிப்பானேன்? அவளை முரட்டுத்தனமாகப் பிடித்து மரத்தில் கட்டிவிட்டான் குதிரைக்காரன். வெள்ளைச்சியின் கூச்சலைக் கேட்டு உதவிக்கு வருவ தற்கு அங்கு ஆட்கள் இல்லை. ஆனால், அன்று தற்செய லாக ராமச்சந்திரன் அப்பக்கம் வந்தான் தூரத்தில் வரும்பொழுதே வெள்ளைச்சியின் நிலையைப் பார்க்க நேர்ந்தது. முதலில் அவன் வெள்ளைச்சி என்று நினைக்கவில்லை. கிட்ட நெருங்கியதுந்தான் அவனுக்குத் தெரிந்தது. வெறிபிடித்தவன்போல, அவ்விருவரையும் தாக்கினான். சின்னான் முரடன். ராமச்சந்திரன் அடிக்கப் பார்த் துக்கொண்டிருப்பானா? தடியைப் பிடுங்கிக்கொண்டு அவன் வெளுத்துவிடவே, ராமச்சந்திரன் மூர்ச்சையாகி விட்டான். அவனுக்குப் பிரக்ஞை வரும்பொழுதும் வெள்ளைச்சி யின் கூக்குரல்தான் கேட்டது. மெதுவாக எழுந்து அவள் கட்டுக்களை அவிழ்த்துவிட்டான். வெள்ளைச்சி அவனைக் கட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி யழுதாள். சில சில சமயம் ரௌத்திராகாரமாகக் காளியைப்போல் இடிக் குரலில் பிதற்றுவாள். ராமச்சந்திரனுக்கு வலி சகிக்க முடியாது போனாலும், யாராவது கொஞ்சம் தைரியத்துடன் இருந்தால்தானே வீட்டிற்காவது போகலாம்!