பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

சிற்பியின் நரகம் சூரியாஸ்தமன சமயம். காவிரிப்பூம்பட்டினத் துறை முகத்தில் என்றையும்விட அதிக நெருக்கடி. கறுத்து ஒடுங்கிய மிசிர தேச வாசிகளும், வெளுத்து ஒடுங்கிய கடார வாசிகளும், தசை வலிமையின் இலட்சியம் போன்ற கறுத்த காப்பிரிகளும், வெளுத்த யவனர்களும், தென்னா டுத் தமிழும், வடநாட்டுப் பிராகிருதமும்- எல்லாம் ஒன் றிற்கொன்று முரண்பட்டுக் குழம்பின. சுங்க உத்தியோ கஸ்தர்கள். அன்னம் போலும், முதலைகள் போலும் மிதக் கும் நாவாய்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பண்டங் களையும், வேலைக்காரர்களையும், பொற்பிரம்பின் சமயோசி தப் பிரயோகத்தால் தணிக்கை செய்துகொண்டிருந்தனர். அரசனுக்குக் கடாரத்திலிருந்து வெள்ளை யானைகள் கொண்டு வரப்பட்டிருக்கின் றன. அவற்றைப் பார்க்கத் தான் என்றுமில்லாத கூட்டம்! அஸ்தமன சூரியனின் ஒளியே எப்பொழுதும் ஒரு சோக நாடகம். கோவில் சிகரங்களிலும், மாளிகைக் கலசங்களிலும் . தாக்கிக் கண்களைப் பறிப்பதுமட்டு மல்லாது, கடற்கரையில் கரும் பாறையில் நிற்கும் துவஜ ஸ்தம்பத்தின்மீது, கீழ்த்திசை நோக்கிப் பாயும் பாவனை யில் அமைக்கப்பட்ட பொன் முலாம் பூசிய வெண்கலப் புலியின் முதுகிலும் வாலிலும் பிரதிபலிப்பது, அவ்விடத் திற்கே ஒரு மயக்கத்தைக் கொடுத்தது. இந்திர விழாவின் சமயத்தில் மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ஸ்நான கட்டத்தின் படிக்கட்டில், பைலார்க்கஸ் என்ற யவனன். கடலை நோக்கியபடி உட்கார்ந் திருந்தான். நீண்ட போர்வையான அவனது டோகா, காற்றில் அசைந்து படபடவென்றடித்து, சிலமயம் அவனது தாடியையும் கழுத்துடன் இறுகப் பின்னியது.