பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

சிற்பியின் நரகம் 45 என்ன, என்ன! நீயுமா?" என்றான் பைலார்க்கஸ். "பைலார்க்கஸ்! நீ நிரீசுவர வாதியாக இருப்பதில் எனக்கு வருத்தமில்லை; மற்றவரைக் கேலி செய்யாதே..." 'அதற்குத்தான் நான் பிறந்திருக்கிறேன். அப்பா! எனது வேலை அது...' "சரி,வாங்கள் போகலாம். சுவாமி வரணும்?" என்று இருவரையும் இரட்டை மாட்டு வண்டிக்கு அழைத்துச் சென்றான் சிற்பி. வண்டியின் கதி மெதுவாகத்தான் இருக்க முடிந்தது. எதிரே யானைகளும், பொதி கழுதை பொதி மாடுகளும். துறைமுகத்தை நோக்கி வரும் நேரத்தில், தீப்பந்தம் பிடித் துச் செல்லும் மக்களை விலக்கிக்கொண்டு வண்டி செல்வது கடினந்தான். திடீரென்று அரசாங்க உத்தியோகஸ்தர் களின் ரதம், யானை வந்துவிட்டால் தெருவே தூளிபடும். முரசொலி இருந்து என்ன பயன்? அந்த உப்பு வண்டி ஓட்டிச் செல்லும் பெண், சிறிது தவறினால், ரதத்தின் அடி யில்தான்! சாத்தனின் வண்டி அதில் முட்டிக்கொள்ள விருந்தது. 44 . தெய்வச் செயல்!" என்றான் சாத்தன். உன் சிருஷ்டி சக்தி!" என்றான் பைலார்க்கஸ், வேறு எதையோ நினைத்துக்கொண்டு. "பைலார்க்கஸ், உனது பேச்சு எனது பெருமையைச் சாந்தி செய்யலாம். நான் எத்தனை நாள் கஷ்டப்பட்டேன்! அது உனக்குத் தெரியுமா? நீ நேற்றுப் பிறந்தவன் கூத்து அதில் எவ்வளவு அர்த்தம்! மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம், தெரியவேண்டுவதெல்லாம்...... இந்தப் பிரபஞ்சமே, பைலார்க்கஸ், நீ நினைப்பதுபோல் வெறும் பாழ் வெளியன்று; அர்த்தமற்ற பேய்க் குழப்பம் அன்று.. இருபது வயசிருக்கும்; அப்போ ஒரு தரம் பாண்டிய நாட் டுக்குப் போயிருந்தேன்... சிற்பத்தைப் பார்க்க வேண்டு மானால் கொல்லிப் பாவையைப் பார்க்க வேண்டும். அங்கே தான், ஒரு மறவன், நாகன், ஒரு கூத்தில் அபிநயம் பிடித் தான். அந்தக் கால் வளைவு, அதை அதிலே பிடித்தேன்...