பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46 புதுமைப்பித்தன் கதைகள் உலகத்தின் அர்த்தத்தை ... ஒவ்வொன்றாக, படிப்படியாக வளர்ந்தது...அந்த மலையத்து நடிகைதான் முகத்தின் சாந் தியை, அந்த அபூர்வமான புன்சிரிப்பை, அர்த்தமற்ற அர்த்தத்தை,- பைலார்க்கஸ், உனக்கென்ன! நீ கேலிக் காரன்--உபநிஷத்தில் தேடியலைந்தேன்....... ஹிமயத்தில் தேடியலைந்தேன்...சாந்தி அந்த இரவு...என் மனைவி அங் கயற்கண்ணி இறந்த அன்று கிட்டியது... பிறகு வெண்கலக் கலப்பிற்கு என்ன பரீட்சை! என்ன என்ன ஏமாற்றம்!... ஆசை. தான் வழி காட்டியது. அந்த ரூப சௌந்தரியம் பெறு வதற்கு எத்தனை ஆட்களைத் தேடினேன் !... அதன் ஒரு சாயை... நீலமலைக் கொடுங்கோலன் - பத்து களுக்கு முன்பு சிரச்சேதம் செய்யப்பட்டானே - அவ னுடைய இடை துவளுதலில் கண்டேன் தெய்வம் ஒன்று உண்டு...அதன் அர்த்தத்தை என் சிலை உணர்த்த முடிந் தது எனது பூர்வ ஜன்மப் பலன்...இந்தக் கைகளால்... பின்னாலிருந்து ஓர் அர்த்தமுள்ள வஸ்து தூண்டாவிட் டால்... அதைச் சாதிக்க முடியும்?" வருஷங நீதான் சாதித்தாய்? நீதான் பிரம்மா! உன் சாதனை தான் அது. சிருஷ்டி! மயங்காதே ! - பயப்படாதே! நீ தான் பிரம்மா! சிருஷ்டித் தெய்வம்!" என்று பைலார்க்கஸ் அடுக்கிக்கொண்டே போனான். பு சாமியார் புன்சிரிப்புடன் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். வண்டியும் நாளங்காடியை அடைந்து, கீழ்ச் சதுக் கத்தின் வழியாக ஒரு சந்தில் திரும்பி, ஒரு வீட்டின் முன்பு நின்றது. மூவரும் இறங்கி வாசற்படியில் ஏறினர்.ஒரு யவனப் பெண் வந்து காலைக் கழுவினாள். ஒரு காப்பிரி, மரியாதையாகக் குனிந்து, கலிங்க வஸ்திரத்தினால் துடைத்தான். "சுவாமி, வரவேண்டும்! பைலார்க்கஸ், இப்படி வா!" என்று இருவரையும் அழைத்துக்கொண்டு, ஓர் அறைக்