பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

52 புதுமைப்பித்தன் கதைகள் வாணிதாஸபுரம், வஞ்சனைச் சுழலிலும், தியாகப் பெருக்கிலும் செல்லும் நாகரிகத்தின் கறைகள் படியாதது. நாயக்கர்கள் காலத்தில் மானியமாகச் சிலருக்குக் கொடுக் கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை, அழியாத. மாறுதல் இல்லாத, நித்திய வஸ்துப் போல, பழைய பழகிய பாதைகளிலேயே அது ஓடிக்கொண்டிருக்கிறது. கிராம வாசிகள் உயிர் வாழ்தலைப் பொறுத்தவரை வெளியூருக்குச் செல்லவேண்டிய அவசியம் கிடையாது. செல்வதுமில்லை. வேண்டியதெல்லாம் சாப்பாட்டிற்கும் துணிக்குந்தானே! உடையைப் பொறுத்தவரை கும் பினியான்' துணி வியாபாரத்தில் அதிக நம்பிக்கை. கிராம வாசிகளுக்கு உலகம் எந்தத் திக்கில் செல்லுகிறது என்ற அறிவும் கிடையாது. அறிய ஆவலும் இல்லை. சனிக் கிழமைச் சந்தைக்கு இலை காய்கறிகளைத் திருநெல்வேலிக் குக் கொண்டு சென்று, விற்றுமுதல் செய்துவிட்டு, அன்று 12-மணி நேரத்தில் அரைகுறையாகக் கேட்டதை மறு சனிக்கிழமை வரை பேசிக்கொண்டிருப்பதில் திருப்தி யடைந்துவிடுவார்கள் அந்த மகாஜனங்கள். கோவில் பூஜை, உபாத்திமைத் தொழில், உஞ்ச விருத்தி என்ற சோம்பற் பயிற்சி - இவைதான் அங்குள்ள பிராமண தர்மத்தின் பிரதிநிதிகளின் வாழ்க்கை இலட் சியம். வேளாண்மை என்ற சோம்பர்த் தொழில் அங் குள்ள பிள்ளைமார்களின் குல தர்மம், மறவர்கள், ஏவின வேலையைச் செய்தல், ஊர்க் காவல் என்ற சில்லறைக் களவு உட்பட்ட சோம்பல் தர்மத்தைக் கடைப் பிடித் தனர். பறைச்சேரி ஊரின் போக்குடன் கலந்தாலும், அல்லும் பகலும் உழைத்து உழைத்து, குடித்து, பேசிப் பொழுதைக் கழித்தது. - ஊருக்கு. கிராம முனிஸீப்பு சுந்தரம்பிள்ளை, பண்ணை யார் ராமையாப் பிள்ளை, சுப்பிரமணிய பண்டாரம், சிவன் கோவில் அர்ச்சகர் சுப்புவையர் - இவர்கள் எல் லோரும் 'பெரிய' மனிதர்கள். எல்லோரும் ஏகமட்டம்; ஏனென்றால், தற்குறிப் பேர்வழிகள். அவர்களில் 'மெத்தப் படித்தவாள்' என்று மரியை எட்டிப் பார்க்கவில்லை. கருதப்பட்டவரே பிரை எழுத்துக் கூட்டி வாசிப்