பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

B கலியாணி ·63 அன்று முழுவதும் அவர் உள்ளத்தில் ஓடிய எண் ணங்கள் ஒரு நிரந்தரப் பைத்தியக்காரனுடைய உள்ளத் தையும் தோற்கடித்துவிடும். இரவு முழுவதும் விளக்கு அணைக்கப்படவில்லை. மூலையில் சன்னலை யொட்டியிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, விளக்கையே கவ. னித்துக்கொண்டிருந்தார். விளக்கின் சிமினி கரி பிடித்து மேலே புகையடைந்து வெளிச்சத்தை அமுக்கியது. இரண்டு நிமிஷம் விளக்கு 'பக் பக்' என்று குதித்தது. அவ்வளவுதான். அதுவும் அணைந்துவிட்டது. போட்டுக் அறை முழுவதும் இருட்டு. உள்ளே உட்கார்ந்திருக்க முடியவில்லை. மேல் வேஷ்டியை எடுத்துப் கொண்டு வெளியே சென்றார், விடிந்துவிட்டது. ஆனால் நட்சத்திரங்கள் மறையவில்லை. கிழக்கே சற்று வெளுப்பு வெள்ளைக் கீறல் மாதிரி. சர்மாவுக்குக் காலையில் நடப்பது மனத்திற்கு நிம்மதி யாக விருந்தது. அவர் வாய்க்கால் கரை வழியாகவே நடந்துகொண்டிருந்தார். சற்றுத் தூரம் சென்றவுடன் வயல் வரப்புக்களின் மீது நடக்க ஆரம்பித்தார். தேகந் தான் ஏதோ யந்திரம் மாதிரி நடந்துகொண்டிருந்தது. மனம் மட்டும் தங்கு தடையின்றிக் கலியாணியின் பின் சென்றுவீட்டது. "கலியாணியை அழைத்துச் சென்று விட்டால்? அதற்கு இசைவாளா அதற்கு சந்தேகம்? பிறகு எங்கு போவது? எங்கு போனால் என்ன - மனிதன் இருக்கும் இடத்தைத் தவிர என்ன நேரே சூரியோதய மாகிவிட்டது. முகத்திற்கு வெய்யில் விழுந்து கண்கூச ஆரம்பித்ததும் சர்மாவுக்கு வெகு தூரம் வந்துவிட்டோம்' என்ற எண்ணம் தோன் றியது. உடனே திரும்பி, குளத்தில் குளித்துவிட்டுப் போவதென்று, அப்பக்கமாகத் திரும்பி நடந்தார். . நிமிஷம் வெய்யிலின் சூடு நிமிஷத்திற்கு மாகிறது. முதுகு பொசுக்கப்படுவது போல் வெய்யில் தகிக்கிறது. அதிக காலை அப்பா"