பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

66 ஒரு நாள் கழிந்தது கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால் தானே?"- என்று முணமுணத்தார் முருகதாசர். - கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜால வித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப்படாததால், அது நடு மத்தியில் ரண்டாகக் கிழிந்து, ஒரு கோடியில் மட்டிலும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை விரிப்பது என்றால், முதலில் உதறித் தரையில் போட்டுவிட்டு, கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பொருந்த வைக்க வேண்டும். அதுதான் பூர்வாங்க வேலை.பின்பு, விடுதலை பெற முயற்சிக்கும் அதன் கோரைக் கீற்றுகள் முது கில் குத்தாமல் இருக்க, ஒரு துண்டையோ, அல்லது மனைவியின் புடவையையோ, அல்லது குழந்தையின் பாவாடையையோ, எதையாவது எடுத்து மேலே விரிக்க வேண்டும். முருகதாசரைப் 1 அவரது பொறுத்தவரை - அது புனைபெயர் -- அது இரண்டு பேர் செய்யவேண்டிய காரியம். மறுபடியும், "கமலா!" என்று கூப்பிட்டார். சமயல் + உக்ராண + ஸ்நான அறை, மூன்று நான்கு கட்டுகள் தாண்டி, துண்டாக, அலாதியாக இருப்பதால், இவருடைய பாய் விரிப்புக் கஷ்டங்கள் அந்த அம்மை யாருக்கு எட்டவில்லை. சென்னையில் ஒட்டுக் குடித்தனம்' என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன், குடியிருக்க