பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

. ஒரு நான் கழிந்தது 5 75 மெழுகுவர்த்தி வரையிலும், வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் பண்டங்களின் காவியங்களை இயற்றிக்கொண் டிருக்கிறார். டபாஸா வீரிய மாத்திரையின்மீது பாடிய பரணியும், தேயிலைப் பானத்தின் சுய சரிதையும், ந்தத் தமிழ் தெரியாத வெள்ளைக்காரனையும் இவர்மீது அனுதாபம் காட்டும்படி செய்துவிட்டன. அதற்காகத் தான் அந்த முப்பது ரூபாய்! வீட்டு எதிரில் நிற்கும் மின்சார விளக்கின் உதவியைக்கொண்டும் பிள்ளையவர்களால் அலமுவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. வெற்றிலை, வேலை. குழந்தை வராத காரணம் - எல்லாம் அவரது மனத்தில் கவலையைக் கொண்டு கொட்டின. கடையிலிருந்து கீழே இறங்கிச் சந்தின் மூலைவரை சென்று பார்த்து பார்த்து வரலாமா என்று புறப்பட்டார். பக்தி மார்க்கத்தில் ஏகாக்கிரக சிந்தையைப் பற்றிப் பிரமாதமாக வர்ணிக்கிறார்கள். மனம் ஒரே விஷயத்தில் லயித்துவிட்டால் போதுமாம். பிள்ளையவர்களைப் பொறுத்தவரை. அவர் இந்தப் 'பணம் என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் தீவிர சிந்தை செலுத்துபவர். பணத்தை வாரிச் சேர்த்துக் குபேரனாகிவிடவேண்டும் என்ற எண்ணம் ஒன்றுமில்லை. கவலையில்லாமல் ஏதோ சாப்பிட்டோம்,வேலை பார்த்தோம், வந்தோம் என்று இருக்கவேண்டும் என்பதற்காக, எத்தனையோ வித்தை களையெல்லாம் செய்துவிட்டார். அவருடைய குடும்பத் தின் வரவு செலவுத் திட்டத்தை மட்டிலும், அவரால் எப்பொழுதும் சமன் செய்ய முடியவில்லை. நிதி மந்திரி யாக இருந்தால். பட்ஜட்டில் துண்டுவிழுவதற்குப் பொருளாதாரக் காரணங்கள் காட்டிவிட்டு, உபமான்யங் களைத் தைரியமாகக் கேட்கலாம். கவலையில்லாமல், கொஞ்சமும் உடம்பில் பிடிக்காமல், கடன் கேட்டுப் புறப்படுவதற்கு முடியுமா? குடும்பச் செலவு என்றால், சர்க்கார் செலவாகுமா? கவலை இருக்கப்படாது என்ற உறுதியின் பேரில் தான் நம்பிக்கை என்ற இலட்சியத்தை மட்டும் திருப்தி செய்விக்க, சாகா வரம் பெற்ற கதைகளை எழுதுவதைக்