பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

84 புதுமைப்பித்தன் கதைகள் முருகதாசர், தமது ஆஸ்தான அறையின் சிம்மாசன மான பழைய கோரைப் பாயில் உட்கார்ந்துகொண்டு, அந்த எட்டணாவைத் திருப்பித் திருப்பிப் கொண்டு, நீண்ட யோசனையில் ஆழ்ந்திருந்தார். பார்த்துக் "அங்கெ என்ன செய்யறீங்க?" என்ற மனைவியின் குரல்! "நீதான் இங்கே வாயேன்!" கமலம் உள்ளே வந்து, "அப்பாடா!" என்று உட்கார்ந் தாள். அவர் கையில் இருக்கும் சில்லறையைப் பார்த்து விட்டு, "இதேது?" என்றாள். "சுப்பிரமணியத்திடம் வாங்கினேன்!" "உங்களுக்கும்... வேலையில்லையா?" என்று முகத் தைச் சிணுக்கினாள் கமலம். பிறகு திடீரென்று எதை யோ எண்ணிக்கொண்டு, ஆமாம். இப்பத்தான் நினைப்பு வந் தது. நாளைக்குக் காப்பிப் பொடியில்லை. அதெ வச்சு வாங்கி வாருங்களேன்!" என்றாள்.

. அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன்! அதைக் கொடுத்துவிட்டால்?” "திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானே சொன்னீர் களாம்!" 66 அதற்கென்ன இப்பொழுது?' "போய்ச் சீக்கிரம் வாங்கி வாருங்கள்!" "திங்கட்கிழமைக்கு?" "திங்கட்கிழமை பார்த்துக்கொள்ளுகிறது!