பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

விநாயக சதுர்த்தி அன்று விநாயக சதுர்த்தி. நான் பலசரக்குக் கடை யிலிருந்து சாமான்கள் கட்டி வந்த சணல் நூல்களையெல் லாம் ஒன்றாகச் சேர்த்து முடிந்து, வீட்டின் கூடத்தில் நாற்கோணமாகக் கட்டினேன். அப்புறம் மாவிலைகளை அதில் தோரணமாகக் கோத்துக் கொண்டிருந்தேன். ஆமாம், பட்டணத்திலே மாவிலைகூடக் காசு கொடுத்துத் தான் வாங்க வேண்டும். 'என்ன மாவிலைக்குமா விலை?' என்று பிரமித்துப் போகாதீர்கள்! மாவிலைக்கு விலையில்லை யென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்.ஆனால், மரத்தில் ஏறிப் பறித்து, வீடு தேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா, இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி, இந்த உழைப்பின் மதிப்பை அந்த இலையின்மேல் ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும். இதுதான் 'விலை' என்பது! நீங்கள் கிராமாந்தரங்களில் இருந்தால், எவனுடைய மாமரத்திலேனும், வழியிற் போகும் எவனையாவது ஏறச் சொல்லி. "டேய், ரெண்டு மாங்குழை பறித்துப் போடுடா! என்று சொல்லிவிடுவீர்கள். சில பிள்ளைகள் தாங்களே மரத்திலேறிப் பறிப்பார்கள்; சிலர் மரத்தோடு கட்டி வைக்கப்படுவதும் உண்டு. இந்த 'ரிஸ்க்' எல்லாம் நினைத்துத்தான் பட்டணவாசிகள், மண் முதல் மாங்குழை வரை, எல்லாப் பொருள்களையும் விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்கள். இதுதான் அழகு, நாகரிகம்! பட்ட ணத்திலே ஆந்தைகள் வசிக்கும் பொந்துகள் மாதிரி யுள்ள வீடுகளில், கும்பல் கும்பலாய் வசிக்கும் நாங்களும் இந்த நாகரிகத்தின் சிறுசிறு துணுக்குகள் தானே? நிற்க நான் தோரணத்தைக் கட்டிக் கொண்டிருந்தேன்.அதா வது, காசு கொடுத்து வாங்கின மாவிலைகளில் வேஸ்டேஜ்' (கழிவு) இல்லாமலிருக்க. இல்லாமலிருக்க.எல்லாவற்றையும் எல்லாவற்றையும் சேர்த்து ... 6

  • ..

...