பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

94 புதுமைப்பித்தன் கதைகள் ள பிள்ளை சேவகர்கள் தொடர்ந்து ஓடினார்கள்.இவன், யாரை இறுக மார்பில் கட்டிக்கொண்டு, மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்க, தெருவழியாக ஓடினான். சேவகர்கள் நாலு பக்கமும் மறிக்கவே, அவன் வசந்த மண்டபத் தோப்புக்குள் குதித்து ஓடினான். சேவகர்கள் நாலைந்து பகுதியாகப் பிரிந்து மடக்க ஓடினத்தினால், பேச்சிக் கசத் தின் பக்கம்தான் அவன் ஓட முடிந்தது. அதைத் தாண்டி னால் கும்பினிக் காவல்காரன் கையில் அகப்படவேண்டியது. தான். சுப்புவுக்கு என்ன தோன்றியதோ - சட்டென்று கசத்தில் குதித்து விட்டான். அவன் அப்புறம் வெளி வரவே இல்லை. "வலைகூடப் போட்டு அரித்துப் பார்த்தார்கள். உடம்புகூட அகப்படவில்லை! அப்பொழுது சாம்பிராணிப் புகையும் வெண்கல மணிச் சப்தமும் என்னை அவள் பக்கம் இழுத்தன. என் மனைவி, நின்று கண்ணை மூடிக்கொண்டு, கை கூப்பிய வண்ணம், அந்தக் களிமண்ணுக்கு அஞ்சலி செய்துகொண்டிருந்தாள். அவள் கண்களை எப்பொழுதும் 'மோட்டார்கார் ஹெட்லைட்' என்று கேலி செய்வேன். அவையும் மூடி ஒரு பரிதாபமான புன்சிரிப்புடன் ஒன்று பட்டன. அவள் மனசில் என்ன கஷ்டம்! என்ன நம்பிக்கை! அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். 61 அப்புறம் என்ன தெரியுமா? அவன் குடும்பத்தில் பிறக்கிற பிள்ளைகளுக்கு எல்லாம் அவன் செத்த வயசில் இந்தப் பிரமை ஏற்படும்...... கடைசியில் வெள்ளைக் களி மண்ணைத் தின்று உயிரை விடும்! -" என்றது மனசு! இதையும் நம்பவேண்டுமா?" என்றேன். "இது முழுப்பொய். கதை ரசமாக இருப்பதற்குச் சொன்னேன்......?" "ஆக்கு......?"