பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

வேதாளம் சொன்ன கதை எனக்கு வேட்டையாடுவதிலே அபார பிரேமை. எனக்கு இந்தப் பழக்கம் வருவதற்குக் காரணமே காசித் தேவர்தான். அவர் பொதுவாக நல்ல மனுஷ்யர்: கொஞ் சம் நிலபுலன்களும் உண்டு. வருகிற கலெக்டர்களுக்கு எல்லாம் 'ஷிகாரி' உத்தியோகம் பார்த்துப் பல மெடல்கள் பெற்றவர்.சமயா சமயங்களில், சில கலெக்டர்களுக்குப் புலிகளைச் சுட்டுக் கொடுத்து, புகழும் புலித்தோலும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார். எனக்கு வேட்டையில் பிரியம் பழக்க வாசனையில் பிறந்த தென்றாலும், மிளா, மான், முயல் இவைகளின் எல்லையைத்தான் எட்டியிருந்தது.ஏனென்றால், நமக்கு நிச்சயமாக இந்த ரகத்தில் அபாயம் கிடையாது அல்லவா? அன்று நான் காசித் தேவரை அழைத்த பொழுது, தமக்குக் கோர்ட்டில் வேலையிருப்பதாகக் கூறிவிட்டார். அவருடைய துப்பாக்கியை வாங்கிக்கொண்டு, பழைய பாபகாசத்தை யடைந்தேன். ஏன் கலியாண தீர்த்தம் வரை சென்று வரலாகாது என்ற யோசனை தட்டியது. முட் புதர் வழியாகவுள்ள குறுக்குப் பாதையாகச் சென்றேன். அப்பொழுது சித்திரை வெய்யில். குத்துச் செடிகளையும் முட் புதர்களையும் தாண்டி, உயர்ந்தமரங்கள் அடர்ந்த பாதைகள் வழியாக. சருகுகள் வழுக்கும் சமயம் துப்பாக்கிக் கட்டையை ஊன்றிக்கொண்டு, சென்றேன். கீழே திரும்பிப் பார்த்தால் பாறைகளும், கண் கானலும்! உயர.எங்கோ இடைவெளி மூலமாகத் தூரத் துப் பொதிய மலைச் சிகரம் தெரியும். பஞ்சு மேகங்கள் சிகரத்தைத் தழுவியும் தழுவாமலும் நீலவானில் மிதந்தன. கூசும்