பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

வேதாளம் சொன்ன கதை 97 போகும் பாதையில் வழி நெடுக, சில் வண்டுகளின் காதைத் துளைக்கும் ரீங்கார சப்தம். சமயா சமயங்களில், திடீரென்று பேசி வைத்தாற்போல் ஒலி நிற்கும். அந்த நிசப்தம் - மௌனம் - சிரமமற்று ஒன்றிலிருந்து ஒன்றில் தாவிச் செல்லும் சிந்தனை வண்டின் போக்கைச் 'சக்' கென்று விசை வைத்ததுபோல் நிறுத்திவிடும். அந்த ஒற்றை வினாடி அமைதியின் பயங்கரத்தை விவரிக்க முடி யாது. அப்பொழுதுதான், சப்த கன்னிகைகள் பிரம்ம ராக்ஷஸுகள். இவற்றின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை நம்மைப் பன்மடங்கு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். நான் ஏதோ நினைத்துக்கொண்டு சென்றேன்.எவ் வளவு தூரம் சென்றேனே! இந்தச் சில்வண்டு ரீங்கார அமைதிதான். என்னைச் சட்டென்று நிறுத்தியது. எந்த இடத்திலோ வழி தவறியிருக்க வேண்டும். நான் நின்ற இடத்திற்கு இதுவரை நான் வந்ததில்லை. இருந்தாலும் அவ்வளவு இலகுவில் பாபநாசம் காடுகளில் நான் வழி தவறிவிடக் கூடியவனல்லன்; சிறு பிராயம் முதலே இப் பகுதிகளில் அலைந்து பழக்கம். பார்ப்போம்.குடி முழுகிவிடவில்லை!' என்று கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பன்னிரண்டு. உச்சி நேரம். கடிகாரம் பசியை எழுப்பியது. தண்ணீரை யாவது குடித்துப் பசியாறலாம் என்று மேலும் கீழுமாகச் சுற்றிப் பார்த்தேன். நான் இருந்த இடத்திற்குக் கீழே. பாறைச் சரிவில் ஒரு சுனை: தூரத்துச் சூரியனின் பளபளப்பு அதில் ஒரு கணம் மின்னியது. அங்கு இறங்கித் தாகத்தைத் தீர்த்துக் கொண்டு, ஆகவேண்டிய காரியத்தைப் பார்க்கலாம் என்று நினைத்தேன். மலைச்சரிவில் நேரே செங்குத்தாக இறங்க வழியில்லை. சிறிது சுற்றி இரண்டு மைல் நடந்து அந்தச் சுனையருகில் வந்து சேர்ந்தேன். கோபுரம்போல் குவிந்து சரிந்த இரு பாறைகளுக்கிடையில் உள்ள ஒரு குகையில் சுனை. அதில் பெருக்கெடுக்கும் நீர் வழிந்து ஒரு சிறிய தடாகமாக முன் பக்கத்தை நிறைத்தது. தரை தெரியும்படியாக அவ்வளவு