பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

என் வேதாளம் சொன்ன கதை 99 கையிலிருந்து துப்பாக்கி நழுவிச் சுனையுள் விழுந்துவிட்டது. வேதாளம் என்றால் யாருக்குத்தான் பயமிருக்காது? அதிலும் எனக்கு! வேதாளப் பயத்தில், துப்பாக்கியையும் கனைக்கு அர்ப் பணம் பண்ணியாகிவிட்டது. காசித் தேவருக்கு என்ன பதில் சொல்லுவது என்றுதான் புரியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில், வேதாளம் ஒரு அந்தர் அடித் துச் சிறகை விரித்துப் பறந்து வந்து, எனக்கெதிரில் உட் கார்ந்துகொண்டது. அதன் பல்லும் முகமும், என்ன கோரம்! முதுகின்மேல், முதுகோடு முதுகாய், அது சிறிது முன் பறந்து வர உதவிய, தோல் சிறகு ஒட்டிக் கிடந்தது. தலை சுத்த வழுக்கை : கபால ஓரத்தில் இரண்டொரு நரைத்த சடைகள்: கைகால் விரல்களில் நாட்பட வளர்ந்து பழுப்பேறிய நகங்கள். அது பல்லைப் பல்லைக் காண்பித்துக்கொண்டு, என்னைப் பார்த்தவண்ணம். குரங்கு மாதிரிக் குந்தி உட்கார்ந்து கொண்டிருந்தது. அதன் ஆழமான கண்களில் கிணற்று ஜலம் மின்னுவது மாதிரி, அதன் கண்மணிகள் மின்னின. கொஞ்சம் மரியாதையாகப் பேசி, தட்டிக் கழித்து விட்டு அதை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் என் ஒரே ஆசை. தட்டுக்கெட்டாற்போல, "நீர் ஏன் அப்படித் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தீர்?" என்று கொஞ்சம் மரியாதைப் பன்மையிலேயே விசாரித்தேன். வேதாளம்/காங்கள் "நான் தோங்கவேண்டும்!" தலை கீழாகத்தான் "வௌவால்களல்லவா அப்படித் தொங்க வேண்டும்?" என்றேன். நான் இதுவரையில் ஒரு வேதாளத்தையாவது நேரில் சந்தித்தது கிடையாதல்லவா! "வௌவால்களும் அப்படித்தான் என்று சொல்லும். தலைகீழாகத் தொங்குவது எங்களது அசைக்க முடியாத