தம்மிடம் உள்ள 'மணிக்கொடி' இதழ்களைப் பார்வையிடக் கொடுத்தவர் திரு. கி. அ. சச்சிதானந்தன். 'சிற்பியின் நரகம்' கதை அவரிடமிருந்த 'மணிக்கொடி இலிருந்தே ஒப்பிடப்பெற்றது.
திரு. பொள்ளாச்சி நசன் அவர்களும், பேராசிரியர் வீ. அரசு அவர்களும் தம்மிடமுள்ள இதழ்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி மறுத்துவிட்டனர்.
இப்பதிப்புத் தொடர்பான சில முக்கிய உதவிகளைச் செய்தவர் திரு. ரகுநாதன். புதுமைப்பித்தன் பற்றிய எந்த வேலைக்கும் அவருடைய உதவியும் ஆலோசனையும் இன்றியமையாதன. 'அன்னை இட்ட தீ', 'படபடப்பு ஆகியவற்றின் கையெழுத்துப்படிகள், சில முதல் பதிப்புகள், புதுமைப்பித்தன் கைப்படத் திருத்தம் செய்த 'நாசகாரக் கும்பல்', 'பக்த குசேலா' நூல்கள் ஆகியவற்றைப் பார்வையிடவும் ஒளி நகலெடுக்கவும் அவர் அனுமதி நல்கினார். பதிப்புத் தொடர்பான ஐயங்கள் பலவற்றையும் களைந்து உதவினார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அயராது புதுமைப்பித்தன் புகழை நிறுவி வரும் ரகுநாதனின் பொது வாழ்க்கைச் செயல்பாடுகளுக்காக மட்டுமல்லாமல், இப்பதிப்பின் செம்மைக்குத் துணைநின்ற அவரது பண்புக்காகவும் இந்த நூலை அவருக்குக் காணிக்கையாக்குவது மிகப் பொருத்தமுடையது.
இப்போது எட்டயபுரத்திலுள்ள ரகுநாதன் அவர்களின் நூற் சிப்பங்களைப் பிரித்துப் பார்க்கத் துணைநின்றவர் திரு. அழகர்சாமி அவர்கள். புதுமைப்பித்தனின் சிறுவயதில் எடுக்கப்பட்ட குடும்பப் படத்தைக் கொடுத்துதவியவர் அவர் தம்பி திரு. சொ. முத்துசாமி.
பாடவேறுபாடுகளைக் குறிப்பதற்கெனப் பல பாடங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருந்தது. இந்தச் 'சள்ளை பிடித்த' வேலையில் சலிப்பில்லாமல் என்னுடன் செயலாற்றியவர் செ. ஆனந்த். தளவாய் சுந்தரமும், முனைவர் நா. கண்ணனும் இதன் தொடர்பில் துணை நின்றனர்.
திரு. எம். சிவசுப்பிரமணியன் (எம். எஸ்), முனைவர் ஆ. ஸ்ரீவத்சன், திரு. 'வைகை குமாரசாமி, திரு. காஞ்சனை சீனிவாசன், திரு. எஸ். ரவிச்சந்திரன், முனைவர் ஸ்டீவன் ஹியூஸ், திரு. ப. தேசிகவிநாயகம், திரு. மகாதேவன், திரு. அரவிந்தன் ஆகியோர் சிறியதும் பெரியதுமான பல உதவிகளைப் புரிந்தனர்.
திரு. சி. சு. மணி, பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன், பேராசிரியர் தொ. பரமசிவன் ஆகியோர் பல்வேறு நிலைகளில் இந்தப் பணிக்கு உதவினர்.
என் ஆய்வுத் தோழர்களான பழ. அதியமானும் பா. மதிவாணனும் இதழ் வேட்டையில் என்னோடு கலந்துகொண்டு கானமுயல்களோடு யானை பிழைத்த வேல்களையும் ஏந்தி வந்தனர். வ. ரா., டி. எஸ். சொக்கலிங்கம் பற்றிய தங்கள் ஆய்வின் மூலம் பெற்ற பட்டறிவை ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்துகொண்டனர். பதிப்பு வேலையின் ஒவ்வொரு நிலையிலும் இவர்கள் துணை எனக்கு உண்டு என்ற எண்ணம் தெம்பூட்டுவதாய் இருந்தது.
புதுமைப்பித்தன் படைப்புகள் அனைத்தையும் அவற்றின் மூலங்களிலிருந்து கண்டெடுத்துப் பதிவாக்கும் ஆய்வுத் திட்டத்திற்கு, சர்
13