இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அவனை என்ன சொல்ல?... பெற்று வளர்த்த சமூகம் இப்படிப்பட்டது. இதற்காக எழுதாமலும் இருக்கிறதில்லை.
காகிதம் எரியும் நாற்றம் அறை முழுவதும் பரந்தது.
விளக்கும் கரி பிடித்து எரிந்து, எண்ணெயற்றுச் சோர்ந்து மங்கிக் கொண்டே வந்தது. வெற்றிலைப் பெட்டியை எடுக்கும் சப்தம். சிங்காரவேலு வெற்றிலை போட்டுக்கொண்டார்.
விளக்கு அணைந்தது.
அவர் மனத்தில் புழுங்கிய தணலும் அவிந்தது.
அன்று அவர் வெகு நேரம் தூங்கவில்லை.
இந்த மாதிரி அசட்டுத்தனமான சமூகத்தை எப்படித் தூக்குவது?
கோழைத்தனம் பிறப்புரிமையாக இருக்கிற இந்தப் புழுக்களை மனிதர்கள் ஆக்குவது எப்படி?
இருள் இருந்தால்தானே ஒளி? ஒளி வராமல் போய்விடுமா?
அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.
எத்தனை காலமோ?
ஒளி வரும்பொழுது நாம் இருக்க வேண்டும் என்ற அவசியமுண்டா? எனது சிருஷ்டிகள் இருந்தால் போதும்!
மணிக்கொடி, 26.8.1934
140
கமகம்