"சொல்லுங்க..."
"நம்ம பையன் பீ.ஏ.தானே?"
'தன் பெண்ணுக்கு வரன் தேடுகிறாரோ' என்று நினைத்தார் பூவையாப் பிள்ளை.
"ஆமாம் தங்கத்திற்கு வயதுதான் வந்துவிட்டதே. எல்லாம் நாளும் கிழமையும் வந்தா முடியும். அதுக்கென்ன விசாரம்" என்றார் பூவையாப் பிள்ளை.
"அதில்லே அண்ணாச்சி. அவுஹ காலேசிலே ஒரு புஸ்தகம் இருக்கிறது. நான் எழுதும் புஸ்தகத்திற்கு அது கட்டாயம் எனக்கு வேண்டியது. எங்கேயும் கிடைக்காது. அவனை எடுத்து வரச் சொல்லுங்க. பிறகு காணமற் போயிட்டது என்று விலையைக் கொடுத்துவிடுவோம்" என்றார்.
"இம்பிட்டுதானே? ஏலே! அய்யா! நடராசாவை எங்கே?"
"நீங்க அவனைப் புஸ்தகத்தை மாத்திரம் எடுத்துவரச் சொல்லுங்க. அவனுக்குத் தெரியாது சின்னப் பையன்."
நடராஜன் வந்தான்.
"அண்ணாச்சிக்கு ஏதோ புஸ்தகம் வேணுமாம். எடுத்துக் கொண்ணாந்து குடு."
பெயர் எல்லாம் எழுதிக் கொடுத்துப் பையனை அனுப்பியாகிவிட்டது.
"பொறவு, நான் போயிட்டு வாரேன்."
"என்ன அதுக்குள்ளே! வெத்திலை போடுங்க. நம்ம சவுந்தரம் இருக்கானே அவன் ஒரு 100 ரூபா வாங்கினான். இப்போ அப்போ என்கிறான். நீங்க கொஞ்சம் பாக்கணும்."
"நான் கண்டிக்கிறேன். அந்த மாதிரி இருக்கலாமா? போயிட்டு வாரேன்" என்று விடைபெற்றுக் கொண்டார்.
பூவையாப் பிள்ளை பணத்தை பெட்டியில் வைத்துப் பூட்டுமுன் எண்ணினார். அதிகமாக இருந்தது. கொண்டு போய் கொடுத்துவிடலாமே என்று நினைத்தார். 'அவராக வரட்டுமே; என்ன இவ்வளவு கவலை ஈனம்' என்று நினைத்துப் பெட்டியில் வைத்துப் பூட்டினார்.
அன்று முழுவதும் சட்டைநாத பிள்ளை வரவில்லை. இரண்டு நாள் பார்த்துக் கொண்டு பாங்கிக்கு அனுப்பலாம் என்று நினைத்துச் சும்மாயிருந்தார்.
சாயங்காலம் நடராஜன் புஸ்தகத்தைக் கொண்டுவந்தான். பிள்ளையவர்கள் அதைக் கொண்டு கொடுத்துப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அதைப் பற்றிப் பேசவில்லை.
2
இரண்டு நாளாயிற்று.
புதுமைப்பித்தன் கதைகள்
145