பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடராஜன் கோபமாகத் தகப்பனாரிடம் சென்றான்.

"என்ன அப்பா இப்படிச் செய்கிறாரே?"

"அதற்கென்ன செய்யலாம்? நீ எப்படியாவது முடித்துவிடு. வீண் சச்சரவு வேண்டாம். உனக்கு உலகம் தெரியவில்லையே!"

"திருட்டுத்தனமல்லவா?"

"திருட்டுத்தனம்தான். யார் இல்லையென்று சொன்னது? எனக்காக முடித்துவிடு."

"நீங்களும் இப்படிச் சொல்லலாமா? அவர் பெண்ணுக்கு இருக்கிற புத்தி கூட..."

கண்களுக்குப் பின் நின்ற முழு உருவம் எப்படியிருக்குமென்று நினைத்துக்கொண்டே காரியத்தைச் சரிபடுத்தச் சென்றான்.

மணிக்கொடி, 2.9.1934

148

நன்மை பயக்குமெனின்