"நம்ம அம்மா இல்லடி இந்த அம்மா.." என்று விளக்குகிறான் ராஜா.
"ஏ ராசா! ராசா!" என்று கூப்பிட்டுக்கொண்டு உள்ளே நுழை கிறாள் மரகதம்.
"என்னாம்மா!"
"பால்காரன் வரக்காணோம். நம்ம வேலைக்காரனும் போக்களிஞ்சு போனான். நீ போய் அவனை கொஞ்சம் சத்தம் காட்டி விட்டு வரமாட்டியா - அப்பா வார நேரமாச்சு; காப்பி போட வாண்டாம்: கொடையை எடுத்துக்கிட்டு போ - பைய, பதனமா போயிட்டு வரணும்!"
"ஆகட்டும் அம்மா!" என்றுகொண்டு புறப்படுகிறான்.
இருவரும் கீழே இறங்கிவருகிறார்கள். மரகதம் வாசல்வரை வந்து குடையை விரித்து அவன் கையில் கொடுத்துவிட்டு உள்ளே போகிறாள்.
இரண்டு கைகளாலும் நெஞ்சுடன் சேர்த்து அமுக்கிப் பிடித்துக் கொண்டு சிறுவன் தள்ளாடித் தள்ளாடி நடக்கிறான். எதிரே வருவதையும் கவனிக்க முடியவில்லை. குடை மழைக்குப் பாதுகாப்பாக இருப்பதற்குப் பதிலாக, காற்றின் வேகத்தால் அவனுடைய சக்தியை முழுவதும் உறிஞ்சிவிடும் பேயாக மாறிவிடுகிறது.
தள்ளாடித் தள்ளாடி நடக்கிறான். உடல் முழுவதும் நனைந்து தலையும் ஈரம் சொட்டி கண்களை மறைக்கிறது....
இந்த நிலையில்...!
ரஸ்தாவில் கவனிக்காமல் குடையைத் தாழ்த்திப் பிடித்துக் கொண்டு, இவன், சாதுவாக நின்ற பசுவை அணுகிவிடுகிறான். பசு வெறித்துக்கொள்ளுகிறது. வாலை முறுக்கி உயர்த்திக்கொண்டு இவனை விரட்டுகிறது. முதலில் பையனுக்கு மோதலின் காரணம் தெரியவில்லை. பிறகு மாடு தென்படுகிறது. பயத்தில் கிறீச்சிட்டுக் கொண்டு ஸ்தம்பித்து நிற்கிறான். பயம் அவனை உந்த மூளை குழம்பி தெறிகெட்டு ஓடுகிறான். பொத்தென்று விழுந்தவன் குடைப் பிடியை விடாமல் எழுந்திருக்கிறான்.
தெருவில் நின்ற யாரோ ஒருவர் "குடையைப் போட்டுவிடு" என்று கத்தி எச்சரிக்கிறார். உதவிக்கு வரவில்லை. குடையைப் போட்டுவிட்டு ஓடுகிறான். விழுந்ததில் ஊமையடி இருந்தும் பயமே வேகத்தைக் கொடுக்கிறது... ஓடுகிறான்.
மாடு குடையை மிதித்து நசுக்கி ஓடித்து மோந்துபார்த்துவிட்டுச் சாந்தமாக நிற்கிறது.
பையன் ஓடுகிறான்.
வீட்டில் வாசல்படியில் பாலுக்காகக் காத்து நிற்கும் மரகதத்திற்கு இவனது பயனற்ற வரவு கடுகடுப்பையும் சீற்றத்தையுமே ஏற்படுத்து-
732
சிற்றன்னை