இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நடத்திய இரண்டொரு பெரும்புள்ளித் திருடர்கள் இவருடைய திறமைக்கு வசதி செய்வித்து வேலையை உயர்த்திக் கொடுத்தார்கள். அவர் வெகுகாலமாக போலீஸ் சர்க்கிள் உத்தியோகத்திலிருந்த தினாலோ என்னவோ, சர்க்கிள் பிள்ளை என்ற பெயர் அவருக்கு ஒட்டிக் கொண்டது. உத்யோகத்தில் இருப்பவர்கள் நிலபுலன் வாங்குவதென்றால் சர்க்காருக்கு எழுதி அனுமதி பெற்றுக்கொள்ள இடமிருந்தாலும், சர்க்கார் உத்யோகஸ்தர்களின் எழுதாக் கிளவியின் படி அவர் தமது மாமனார் பெயரில் மறுகால்மங்கலத்தில் நில புலன்கள் வாங்கி வந்தார். புதுமைப்பித்தன் கதைகள் 773