பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/811

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களுக்கும் கூட அதுதான் அழகு. நாங்கள் என்ன இந்த நாகரிகத்தில் சிறு சிறு துணுக்குகள் இல்லையா?

"நான் தோரணத்தைக் கட்டிக்கொண்டு இருந்தேன். அதாவது காசு கொடுத்து வாங்கின மாவிலைகளில் 'வேஸ்டேஜ்' (பொருள் உற்பத்தி, தொழில் ஆற்றுதல் இதில் எல்லாம் கொஞ்சம் விளளாகிப் போய்விடும் என்று பொருளாதார சாஸ்திரி சொல்லுகிறார். உம்ம வீட்டில் அரிசி மாவு தரையில் கொட்டிப்போய் விட்டதென்றால், அதை எல்லாம் திரட்டி பாத்திரத்தில் போடும்போது உமது விரல்களுக்கும் அகப்படாமல் சிறிது தங்கிவிடுகிறதல்லவா; அதுதான் இந்த 'வேஸ்டேஜ்') இல்லாமல் இருக்க எல்லாம் சேர்த்து வைத்துத் தொடுக்கிறேன். எனக்குப் பல் முளைத்தது மாதிரி 'ஒத்துக்குற்றா' தொங்குகிறது. நமது பொருளாதாரம், அதன் சாஸ்திரிகள் விதிகளுக்கும் அதீதமானது."
(2) ப. 368, 8ஆம் பத்தி, கடைசி வரி "...'அப்படி அப்படி', 'அப்படி 'அப்படி' என் மனசில் 'குத்துக்குத்தாக' முளைத்தன" என உள்ளது.
(3) ப. 369, 2ஆம் பத்தி : "கும்பினிக்காரன் வந்த புதுசு" என்று தொடங்கிய பிறகு கீழ்க்காணும் பத்தி நீக்கம் பெற்றுள்ளது:
"நம்ம ஜாதிகளுக்குள்ளே எல்லாந்தான் பாட்டன் பெயரை 'பெயரனுக்கு' இடும் வழக்கம்) ஒரு மருத வேளானும், ஒரு சுப்பு வேளானும் பெண் சந்ததி குறுக்கிடாவிட்டால் சரமாரியாக உருண்டு வந்து குடும்ப சரித்திரத்தை நிரப்புமே....."
(4) ப. 369, 2ஆம் பத்தி, கடைசிப் பகுதி பின்வருமாறு அமைத்துள்ளது! "குஷ்டந்தீர்த்த துறை என்ற பேர் வண்ணாரப்பேட்டை என்று ஆகி. கடைசியாக, கும்பினிக்காரனுக்கு அடிமைத் தொழில் ஆகுவாயாக 'தொழிலடிமைப் பெயராயிற்று' என்று இலக்கணம் சொல்லியது. "'பாதகமில்லை தம் மளசும் கொஞ்சம் இலக்கணம் ஏதோ படித்திருக்கிறது' என்று எனக்குள் ஒரு பெருமை"
(5) ப. 369, 7ஆம் பத்தி பின்வருமாறு அமைந்துள்ளது: "ஏடி, கமலா! கொஞ்சம் அந்த செல்வத்தை எடுத்துவை. எனக்கு கொஞ்சம் 'இடை வேளை' வேண்டும்" என்று கேட்டேன்.
(6) ப. 370, 3ஆம் பத்தி: கடைசி இரண்டு வாக்கியங்கள் சேர்க்கப் பெற்றுள்ளன.
(7) ப. 370, 4ஆம் பத்தி, 2ஆம் வரியில் "'ஒய்' என்ற வினியிடைச் சொல்.." என்பதிலிருந்து பத்தியின் பிற்பகுதி முழுவதும் சேர்க்கப் பெற்றுள்ளது.
(8) ப. 372, 'அடுக்களைத் தாலி' பற்றிய அடிக்குறிப்பு, "அந்தரங்கமாகச் சென்று அரைஞாண் கயிறுகொண்டு தாலிகட்டுவது; கந்தர்வ விவாகத்திற்கு சமமான பழக்கம்" என அமைந்துள்ளது.
(9) ப. 373, 5ஆம் பத்தி, 7ஆம் வரி: "அவன் வசந்த மண்டபத் தோப்புக்குள் குதித்து (அப்பொ முதலியார் குதிரை லாயம் இருந்தது} ஓடினான்" என உள்ளது.
(10) ப. 374, 2ஆம் வரி: "ஆக்கு...! என்பதற்கு அடுத்து " 'கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்குப் போனால் எத்தனை வேண்டுமானாலும் பார்க்கலாமே' என்றது என் மனசு" என்ற வரி நீக்கம் பெற்றுள்ளது.

(11) ப. 374, கதையின் கடைசி வரி, "சொந்த வீடாக இருந்தாலும்!" என்பது நீக்கம் பெற்றுள்ளது. 60. ஒரு நாள் கழிந்தது

810

பின்னிணைப்புகள்