பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே முருகுசுத்தரம் தனவா?' என்றேன். பாவேந்தர் சிந்தனையில் ஆழ்ந் தார். ஏன் முடியாது? முடியும்; அந்த நோக்கத்துட்ன் கவிதை இயற்றினுல்’-என்ருர், அவரவர் பழக் கத்தில்-அவரவர்க்கு அச்சொல் பொருள் வேகம் தருவது இயல்பு. எனினும்-தவிர்க்கக் கூடிய சொற் களைத் தவிர்க்கலாம் என்றே எண்ணுகிறேன்’ என்ருர் கவிஞர் இந்த உரையாடல் திகழ்த்தது 1943-ஆம் ஆண்டில், ஒருவகையில் பாவேந்தரின் பெருந்தன்மையான உள்ளம், தமிழ்ப்பற்றில் தவழ்ந்த அறிவு இளைஞர் களாகிய எம்மிடம் உரையாடியதையே ஒரு மையக் கருத்தாகக்கொண்டு, தனித்தமிழ் குறித்துப் பிறகு ஆழ்ந்து எண்ணத் தலைப்பட்டது. அதன் பயன்தமிழர்களின் பெரும்பேறு எனத்தகுமாறு- தமிழியக் கம்’ என்னும், தமிழை மாய்த்திடும் அறியாமையை எதிர்த்து உணர்வேற்றும் ஏடு- தனித்தமிழ் காத்திடும் கொள்கை பரப்பும் கவிதை நூல் பிறந்தது. ஆம்! அரசியல் சீள் வாய்ந்தார்' என்னும் தலைப்பில் முழங்குவது இது. தெலுங்கு தமிழ் நாட்டினிலேன்? செத்தவட மொழிக்கிங்கே என்ன ஆக்கம்? நலங்கண்டீர் தமிழ்மொழியால் நற்றமிழை ஈடழித்தல் நன்ருே?

  • * * * - or כימי *** R --

அரசியலாள் அறிக்கையிலும் சுவடியிலும் தமிழ்ப்பெருமை அழித்திடக்கை வரிசையெலாம் காட்டுவதோ? வடமொழியும் பிழைத்தமிழும் பெருகிவிட்டால் வகுநாளில் தமிழழியும் வடமொழிமே லோங்குமெனும்