பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில் 26 கருத்தோ? நாட்டில் திருடர்களை வளரவிடும் ஏற்பாடோ? செல்லுபடி ஆகா திங்கே! திருடர்கள் ஜாக்கிரதை இதைத் திருடருண்டு விழிப்போடி ருங்கள் என்ருல் வருந்தீமை என்ன?நியா யஸ்தலத்தை அறமன்றம் எனில் வாய்க் காதோ? அருவருக்கும் நெஞ்சுடையார் அருவருக்கும் செயலுடையார் . அன்ருே இந்தக் * கருவறுக்கும் வினைசெய்வார் கலப்பாலில் துளிநஞ்சும் கலத்தல் வேண்டாம்! பாவேந்தரின் உள்ளத்தில், "பிற மொழிக் கலப்பினல் தமிழுக்குக் கேடு ஏற்படும்:- எனவே தமிழ்ப் பயிரிடை வடமொழிக்களை வளர இடந்தரலாகாது என்னும் எண்ணம் உரம் பெற்றதன் விளைவே. மேலே காணும் கவிதையும் அவை ஒத்தபலவும், தமிழில் வடசொல் கலத்தல் வேண்டாம் என்வார், கலப்பாலில் துளிநஞ்சும் கலத்தல் வேண்டாம்' என்ருர்! கணக்காயர்' என்னும் தலைப்பில்,

  • தமிழ்மொழியை வடசொல்லுக்கு

மிகத்தாழ்ந்த தென்கின்ருன்! வட்சொற்கு மகிழ்கின்ருன்! வடசொல் இது தமிழ்ச்சொல் இது எனப்பிரித்துக் காட்டிடவும் மாட்டான்! என்றுரைத்ததலுைம் பாவேந்தர் உள்ளம் விளங்கும். "கூடத்தர்' என்னும் தலைப்பில், த்ாய்ப்பாலில் நஞ்செனவே தமிழில் வடமொழி சேர்த்தார்!