பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75|முருகுசுந்தரம் பாவேந்தர், "அண்ணே! இந்தத் தம்பி (கிருஷ்ண மூர்த்தியைக் காட்டி) திருப்புளிசாமி வாத்தியார் இருந் தாரே அவர் மகன்; சிலை செய்வதில் மிகக்கெட்டிக் காரன்; பாரதியார் சிலையைச் செய்துகிட்டிருக்கான், செத்த கொஞ்ச திரும்பேன்; தலையை மட்டும் காட் டேன்; வேறெதையும் காட்டாதே! (நகைத்தல்) உன் தலை பாரதியார் தலையாட்டம் இருக்குதாம்.’’ என்ருர், நாய்க்கர் சிரித்துக் கொண்டே திரும்பி உட்கார்ந்தார். கிருஷ்ண மூர்த்தி சில நிமிடங்களில் அவரது தலையின் வழுக்கைப் பகுதியை மிக அழகாகப் படம் பிடித்தது போல் எழுதிவிட்டான். சுமார் இரண்டு மாதங்கள் தினமும் காலையில் பள்ளிக் கூடம் போகும்போதும் 11-30க்குப் பள்ளிவிட்டுத்திரும்பி வரும் போதும் சிலையைப் பார்ப்பார். அந்தச் சிலையை உருவாக்குவதில், கவிதை எழுதும்போது சிகரெட் கூட ஊதாமல் எப்படி உணர்ச்சியின் உருவாய் இருப்பாரோ, அவ்வித உணர்வோடு இருப்பார். வேறு எதிலும் அவ்வித அக்கறை காட்டியதை நான் கண்டதில்லை. சிலைப்பணி நடந்து கொண்டிருந்த போது எனக்கு மூன்ருண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்ப்ட்டது. 18 மாதங்கள் சிறையில கழித்துவிட்டு நான் வெளியே வந்தபோது, அந்தச் சிலையைச் சக்தி கோவிந்தன் அவர்களுக்கு விற்று விட்டதாகக் கூறிஞர்கள். தான் வேதனைக் கடலில் ஆழ்ந்தேன். பாவேந்தரும் இவ்வளவு சிரம்ப்பட்டு உருவாக்கியது போய்விட்டதே என்று அங்கலாய்த்தார். அண்மையில் விசாரித்ததில் சிலை சக்தி கோவிந்தன் அவர்கள் வீட்டில் இல்லை என்று தெரிந்தது. காரைக் குடியில் யார் வீட்டிலோ பாரதியார் என்று தெரியாமல் ள் அலங்காரப் பொருளாக அது இருக்கும் என்று நினைக்கிறேன். D புதுச்சேரித் தொழிலாளர் இயக்கத்தைத் தொடக்கத்தி லிருந்து பாரதிதாசன் ஆதரித்து வந்தார். ஆலத் தொழிலாளர்கள் பலர் திராவிடர்க் கழகத்தைச் சேர்ந்த