சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 39 என்று ஆற்றுப் படுத்துகின்றார். இதனால் இவர் தொழிற் கல்விக்கும் ஊக்கம் தருவதை உணரலாம். பெண் கல்வி : ஆறு, செல்வம், கலை, உடுக்கள் இவற்றையெல்லாம் பெண் தெய்வமாகப் பாவிக்கும் நம் நாட்டில் பாரதியார் இக்காலச் சமூகம் பெண் இனத்திற்கு மதிப்பு தராத இழிநிலையை நினைந்து பார்க்கின்றார். ஞாலம் முற்றும் பராசக்தி தோற்றம்’ என்பதில் அழுந்திய மனத் தையுடைய கவிஞர் பெண் இனத்தைப் பற்றிச் சிந்திப்பது இயல்பேயன்றோ? எனவே, செவ்விது, செவ்விது, பெண்மை - ஆ! செவ்விது செவ்விது காதல்! காதலி னாலுயிர் தோன்றும் - இங்கு காதலி னாலுயிர் வீரத்தி லேறும்! காதலி னாலறி வெய்தும் - இங்கு காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்.28 என்று பெண்மையையும் காதலையும் இணைத்துப் போற்றுவர். காதலின் ஊற்று பெண்ணன்றோ? 'மனைக்கு விளக்கு மடவார்’ என்று பேசுவர் நான்மணிக்கடிகை ஆசிரியர். ஒரு குடும்பத்தில் தலைவி கற்றவளாக இருந்தால் அவள் வழித்தோன்றல்கள் யாவ ரும் நல்ல சூழ்நிலையில் கல்வி பெறுவதற்கு அடிப்படை அமைத்துத் தருவாள் என்பது கவிஞரின் கருத்து. பெண் களுக்கு உரிமை இல்லாததாலும் பெண்கள் படிக்கக் கூடாது என்ற மூடப்பழக்கம் எப்படியோ ஏற்பட்டு 20. த. பா. அந்திப் பொழுது-3, 4.
பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/49
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7c/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/page49-658px-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf.jpg)