இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஞான தீர்த்தம்
51
அதிகமாவதற்காக மறுபடியும் சேர்த்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்” என்றேன்.
மற்றவர்கள் அருமையான காபியைக் குடித்து நொட்டை போடுவதைப் பார்க்கும்போதும், அருகில் உள்ளவர்கள் காபியை ஆற்றுகையில் உண்டாகும் நறுமணம் மூக்கைத் துளைக்கும் போதும் எனக்குச் சிறிதே சபலம் தட்டுவதுண்டு. ஆனால் காபியைக் குடிக்காத சிறிய செயலைப் பெரிய தியாகமாக எண்ணி அன்பர்கள் என்னை மதிக்கிறார்களே, அந்த மதிப்பை இழந்துவிட விருப்பம் இல்லை. அதனால்தான் அந்த விரதத்தை இன்னும் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.