பக்கம்:புது மெருகு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிர்வாண தேசம்

63

சாதுவன் அவர்களைப் பின் தொடர்ந்தான். எங்கும் காடுகள், கனி மரங்கள், இடையிடையே எலும்புக் குவியல்கள்; இவைகளைத் தாண்டிக் கொண்டு ஒரு மலைக் குகைக்கு யாவரும் சென்றார்கள். அந்தக் குகையில் ஒரு கரடி தன் மனைவியோடு இருப்பதுபோல நாகர்களுடைய தலைவன் தன் ராணியோடு உட்கார்ந்திருந்தான். அவனை சுற்றிலும் எலும்புக் குவியல்கள் கிடந்தன.

சாதுவன் அந்தத் தலைவனுகு முன் நின்றான். "உங்களைப் பார்ப்பதற்காக என்னை இவர்கள் அழைத்து வந்தார்கள்" என்றான்.

நாகர் தலைவன் சந்தோஷத்தால் பல்லை இளித்துக் கொண்டு இரண்டு முழம் எழும்பிக் குதித்தான். அவன் மனைவி நல்ல ஆகாரம் வந்திருக்கிறதென்று பல்லைத் தீட்டிக்கொண்டாள்.

அந்த நிர்வாண தேசத்தில் அவன்தான் குரு, அவனே அரசன். அவனது ஆணையின்படி அந்த நிர்வாணப் பிராணிகள் சேவகம் புரிந்தன.

சாதுவன் நாக அரசனோடு சிறிது நேரம் பேசினான். அந்தப் பேச்சைக் கேட்பதில் அந்தத் தலைவனுக்கும் மற்றவர்களுக்கும் உண்டான இன்பத்திற்கு எல்லை இல்லை. 'நாம் தினந்தோறும் இதைப் பேசுகிறோம். ஆனாலும் இவன் பேசும்போது என்ன இனிமையாக இருக்கிறது!" என்று அவர்கள் வியந்தார்கள். சாதுவன் அழகாகக் கருத்துக்களைக் கோத்துப் பேசினான். " வெட்டு, குத்து, தின்னு, அடி, உதை" என்பவை போன்ற பிரயோகங்களுக்கே உபயோகப்பட்ட அந்த நாகர் பாஷை நாகரிக மனிதன் ஒருவனுடைய கருத்தை வெளியிட உதவும்போது அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/68&oldid=1549161" இலிருந்து மீள்விக்கப்பட்டது