பக்கம்:புது வெளிச்சம்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூறுகிறது. இந்த அதிரிசயமும் ஒரு புதிர்தான். மீண்டும் நாம் அகராதியினிடம் சரணாக வேண்டியுள்ளது.

'திரிசியம் எனின் காணப்படுவது என்று கூறுகிறது அகராதி. இந்தத்திரிசியம் எனும் சொல், முதலில் அகரத்தைப் பெற்று அதிரிசியம் என வந்தால்அதுதான் பரோச்சமாம். இதன் பொருள் காணப்படாதது என்பதுதானாம். எத்தனை சிரமம் கொடுக்கிறது. நமக்கு இந்தப் பரோச்சம்.

பரோச்சஞானம் எனின், காணப்படாதது பிரம்மம்', அது உண்டு, எனப் பிறர் சொல்லி நாம் அதை நம்பும் தன்மைக்குப் பெயர்தான் பரோச்சம், ஆனால் அந்தப் பிரம்மம் எனும் ஒன்று இன்னது எனத் தெரியாது, பிரம்மம் உண்டு என்ற நிலையில் நம்மைச் சதாவைத்துக்கொண்டே பிரம்மத்தை இன்னதென அறிந்தவர்கள் அதனை விவரித்து விளங்க வைக்காடமல் இருபத்திரண்டு நூற்றாண்டுகளாக நம்மை அடிமைகளாஅக்கி உருவங்களை வணங்கவைத்துக்கொண்டே உள்ளனர். இது அவர்களுக்கு முதலில்லாத வியாபாரம், இலவசமான மேலாண்மை யோடு சுகTவனம் செய்ய நல்லதொரு மார்க்கமாகவே அமைந்துள்ளது எனின் உள்ளதைச்சொன்னால் உடலெரிச்சல் என்னும் பழமொழிப்படி அவர்கள் உடல் மட்டுமன்றி உள்ளமும் பற்றி எரியத்தான் செய்யும்.

நான் சிந்திக்கிறேன். ‘தத்வம் அசி - அது நீயாயுள்ளனை என்ற உண்மையை மறைத்து, நீ மனிதன் அது தெய்வம் என்று அறி வாழப்பிறந்த மக்களின் வாழ்வை அறவே பாழாக்கி வைத்த அந்த மூன்று ஆச்சாரிமார்களிடம் அப்படி என்ன சக்தி இருந்தது என்று சிந்திக்கும் போது அதற்கு விடை சூழ்ச்சி என்றுதான் எதிர்ப்படுகிறது. ஆம்! சுயநலச் சூழ்ச்சி ! என்பதுதான் சரியான விடை.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு விதிமுறைகளையும் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் செய்து நூலுக்குத் தந்த திருவள்ளுவரை அறவே மறந்துவிட, அல்லது சரியாக புரிந்து கொள்ளாத தமிழ் மக்களின் உள்ளங்களை சுவர்க்க பாசம் எனும் ஆவலைத் திணித்து தவறான பாதையில் ஈர்த்துச் செல்ல திட்டமிட்ட சூழ்ச்சியால், அந்தக் கால ஆச்சாரிகள் கூட்டத்தினர் மயக்கினர் என்று நான் நிரூபண ரீதியில் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

புது வெளிச்சம்

93