பக்கம்:புதையலும் பேழையும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புை தயலும் பேதையும்

(பொருளாய்வுக் கட்டுரைகள்)

பொருளாய்வு ஓர் உழவுப் பணி. உழவெனில்

ஆழ உழ வேண்டும், மண் வளமும் வேண்டும். தமிழ் மண் உலக வாழ்வியலின் ஊற்றுக்கண், பண்பாட்டு விளைச்சலின்

நாற்றங்கால். தமிழ் இலக்கியங்கள் அமுதக் கழனிகள். அவற்றில் அறுவடையாகும் பொருள் களின் தொகுப்பு ஓர் நெற்களஞ்சியம் ஆகும். இக்களஞ்சியம் மணிகளும் பொன்னும் பொதிந்தது.

எனவே,

பொருட் பேழை, ஒரு மணிப் பேழை.