பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 / புத்தரின் வரலாறு

16. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)



திருமேவு பதுமஞ்சேர் திசைமுகனே முதலாக
உருமேலியவதரித்த உயிரனைத்து முயக்கொள்வான்
இவ்வுலகுங் கீழுலகும் மிசையுவகும் இருணீங்க
எவ்வுலகுத் தொழுதேத்த எழுந்தசெழுஞ் சுடரென்ன
விலங்குகதிர் ஓரிரண்டு விலங்கிவலங் கொண்டுலவ
அலங்குசினைப் போதிநிழல் அறமமர்ந்த பெரியோய் நீ.

(தாழிசை)



மேருகிரி இரண்டாகும் எனப்பணைத்த இரும்புயங்கள்
மாரவனி தையர்வேட்டும் மன்னுபுரம் மறுத்தனையே
வேண்டினர்க்கு வேண்டினலே யளிப்பனென மேலைநாள்
பூண்டவரு ளாளநின் புகழ்புதிதாய்க் காட்டாதோ.

உலகுமிக மனந்தளர்வுற் றுயர்தெறியோர் நெறியழுங்கப்
புலவுநசைப் பெருஞ்சினத்துப்புலிக்குடம்பு கொடுத்தனையே
பூதலத்துள் எவ்வுயிர்க்கும் பொதுவாய திருமேனி
மாதவனீ என்பதற்கோர் மறுதலையாக் காட்டாதோ.

கழலடைந்த வுலகனைத்தும் ஆயிரவாய்க் கடும்பாந்தள்
அழலடைந்த பணத்திடையிட் டன்றுதுலை ஏறினையே
மருள்பாரா வதமொன்றே வாழ்விக்க கருதியநின்
அருள்பாரா வதமுயிர்க ளனைத்திற்கு மொன்றாமோ

(அராகம்)



அருவினை சிலகெட ஒருபெரு நரகிடை
ஏரிசுடர் மரைமலர் எனவிடு மடியினை
அகலிடம் முழுவதும் அழல்கெட வமிழ்துமிழ்
முகில்புரி யிமிழிசை நிகர்தரு மொழியினை.

(ஈரடி அம்போதரங்கம்)



அன்பென்கோ ஒப்புரவென்கோ ஒருவ னயில்கொண்டு
முந்திவிழித் தெறியப்பால் பொழிந்தமுழுக் கருணையை-
நாணென்கோ நாகமென்கோ நன்றில்லான் பூணுந்
தீயினைப் பாய்படுத்த சிறுதுயில்கொண் டருளினை.

(ஓரடி அம்போதரங்கம்)