பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 47

உள்ள மயிர்க்கால்கள் வழியாக உணவுச்சத்தினைத் தங்களுடைய உடம்பில் செலுத்துவோம்" என்று கூறினார்கள்.

இதைக்கேட்ட கௌதமர், "நான் உணவு கொள்வதை அடியோடுநிறுத்திலிட்டால், இவர்கள் மயிர்க்கால்கள் வழியாக ஆகாரத்தை உடம்பில் செலுத்துவார்கள். அதனால் நான் உணவை உட்கொண்டவன் ஆவேன். இவர்கள் அவ்விதம் செய்யாதபடி நானே சிறிதளவு உணவை உட்கொள்வது நலம்" என்று தமக்குள் கருதினார். இவ்வாறு கருதின கௌதம முனிவர் கொள்ளு, கடலை, பயறு முதலியவற்றை வேகவைத்த திரைமட்டும் உட்கொள்வது நல்லது என்று கருதி அதன்படியே பயிறுகளை வேகவைத்த நீரைமட்டும் சிறிதளவு உட்கொண்டார்.

உடல் வற்றிப்போதல்

இவ்வாறு அற்ப உணவாகிய பயிற்றுநீரை மட்டும் உட்கொண்டு வேறு எவ்வித உணவையும் உண்ணாதபடியினாலே, நாளடைவில் கௌதம முனிவருடைய உடம்பு இளைத்துவிட்டது. அவருடைய புட்டங்களில் சதை சுருங்கி குழிவிழுந்தன. முதுகெலும்பு முடிச்சுபோடப்பட்ட கயிறுபோலத் தெரிந்தது. விலா எலும்புகள், எண்ணக்கூடியபடி, வெளியே தெரிந்தன. நெற்றியிலும் முகத்திலும் உள்ள தோல், வெயிலில் காய்ந்த கத்தரிக்காயின் தோல் போலச் சுருங்கி விட்டது. வயிறு ஒட்டிப்போயிற்று. கண்கள் குழி விழுந்துவிட்டன. உட்காரும்போது தலைகுனிந்தது. கையினால் தலையைத் தடவினால் தலைமயிர் உதிர்ந்துவிட்டது. உடம்பைத் தடவினாலும் உடம்பில் உள்ள மயிர்கள் உதிர்ந்தன. தெரிந்து கொள்ள முடியாதபடி உடம்பின் நிறம் மாறிவிட்டது. உடம்பு கருநீறமா நீலநிறமா மண்நிறமா என்று சொல்ல முடியாதபடி மாறிப் போயிற்று. இவருடைய உண்ணாநோன்பு இவரை இவ்வாறு செய்துவிட்டது. உடம்பில் இவ்வளவு துன்பம் ஏற்பட்டபோதிலும் இவருடைய மன உறுதி மட்டும் மாறவில்லை.

மயங்கி விழுதல்

உண்ணா நோன்பினாலே உடல் வற்றிப்போன கௌதம முனிவர் ஒரு சமயம் மலம் கழிக்க உட்கார்ந்தார். வயிறுவற்றிக் குடல் ஒட்டிப் போன படியினாலே மலத்துவாரம் அடைபட்டு அதில் அதிக வலி உண்டாயிற்று. அந்த வலி பொறுக்கமுடியாமல் கௌதம முனிவர் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். இந்த நிலையில் இவரைக்