பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 / புத்தரின் வரலாறு

கொண்டே நிரோதசத்யத்தைப் பெற்றுக்கொண்டே அஷ்டாங்க மார்க்கத்தை அனுசரித்துக்கொண்டே இரண்டாவது ஞானதரிசனத்தைப் பெற்றார். அதாவது சத்ருதகாமீ மார்க்க ஞானம் அடைந்தார்.

பின்னர், போதிசத்துவர் உதய வியய ஞானத்திலிருந்தும் சமஸ்காரங்களுடைய இலக்கணங்களைப் பார்க்கத் தொடங்கினார். முன்போலவே சமஸ்காரோபேக்ஷா ஞானத்தின் கடைசியில் அனுலோம கோத்ரபூஞானங்கள் தோன்றி துக்கத்தைக் கண்டு, சமுதாயத்தை நீக்கி, ராகத்வேஷ முதலியவற்றை அகற்றி, நிர்வாண மோக்ஷத்தை யடைந்துகொண்டே அஷ்டாங்க மார்க்கத்தை அனுசரித்துக் கொண்டே மூன்றாவது ஞான தரிசனத்தைப் பெற்றார். அதாவது அனாகாமீ மார்க்க ஞானம் அடைந்தார்.

அப்போது, இன்னும் சில கிலேசங்கள் மிஞ்சி நிற்பதைக் கண்டு, முன்போலவே உதய வியய முதலான ஒன்பது விதமான பெரிய விதர்சனா ஞான மூலமாக சமஸ்காரங்கள் அனித்யம், துக்கம், அனாத்யம், அசுசி என்று அறிந்து படிப்படியாக ஆராயும்போது, போதி சத்துவருக்கு சம்ஸ்கா ரோபேக்ஷா ஞானமும் பிறகு அனுலோம கோத்ரபூ ஞானங்களும் பிறந்தன. அப்போது துக்கங்களையெல்லாம் கண்டு சமுதாய சத்தியத்தை(வாசனா தோஷங்களை) அறவே நீக்கி நிர்வாணத்தைப்பெற்றுக்கொண்டே மார்க்கத்தை அனுஷ்டித்துக் கொண்டே நான்காவது ஞான தரிசனத்தைப் பெற்றார். அதாவது அர்ஹந்த மார்க்க ஞானம் அடைந்தார்.

மேலே கூறின சுரோதபத்தி, சத்ருதகாமி, அனாகாமி, அர்ஹந்த என்னும் நான்கு மார்க்கங்கள் ஞான தர்சன விசுத்தி என்று கூறப்படும். போதிசத்துவருக்கு அர்ஹந்த மார்க்க ஞானத்துடன் நான்கு விதமான பிரதிசம்பிதா ஞானமும் ஆறுவிதமான அசாதாரண ஞானமும் பதினான்கு விதமான புத்த ஞானமும் பதினெட்டு விதமான ஆவேணிக தர்மங்களும் பத்துவிதமான பலமும் நான்கு விதமான வைசாரத்யங்களும் முதலான கணக்கற்ற புத்த குணங்கள் நிறைந்தன.

இவ்வாறு இரவு முழுவதும் யோகத்திலிருந்து கிலேசங்களையெல்லாம் வென்று மிகவுயர்ந்த மேலான சம்புத்த பதவியை யடைந்தார்.

அடைதற்கரிய புத்த பதவியை அடைந்த ததாகதர், தாம் பிறவித் துன்பத்திலிருந்து வீடு பெற்றதையும் கிடைத்தற்கரிய பதவி