பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 95


ஆனார்கள். பின்னர் இவர்களே சந்நியாசம் பூண்டு பிக்குணிகளானார்கள்.

பகவன் புத்தர் அரண்மனைக்குச் சென்று தமக்காக அமைத்திருந்த ஆசனத்தில் பிக்கு சங்கத்தோடு இருந்தார். அரசர் அறுசுவை உணவு அன்போடு அளித்தார். பகவர் பிக்குக்களுடன் உணவு அருந்திய பிறகு, விம்பசார அரசன் ஒருபுறத்தில் உட்கார்ந்து, "சுவாமி! புத்த தர்ம சங்கம் என்னும் மும்மணியிலிருந்து நான் விலகி வாழ முடியாது.நான் அடிக்கடி பகவரிடம் வந்து திருவாய்மொழி கேட்க வேண்டும். பனைவனம் வெகு தூரத்தில் இருக்கிறது. வெளுவனம்[1] இடைவழியில் இருக்கிறது. அதிக ஜனக்கூட்டம் இல்லாத அமைதியான இடம். அந்த வனத்தைப் பகவர் ஏற்றுக்கொண்டு அங்கு எழுந்தருளியிருக்க வேண்டும்'" என்று கேட்டுக்கொண்டு, பொற்கிண்டியிலிருந்து நீரைத் தாரைவார்த்து வெளுவனத்தைப் பகைவருக்குத் தானம் செய்தார். பகவன் புத்தர் அதனை ஏற்றுக் கொண்டு பிக்கு சங்கத்தாருடன் வெளுலனத்துக்குச் சென்றார்.

சாரிபுத்த மொக்கல்லானர்

அக்காலத்திலே இராசகிருக நகரத்திலே இருநூற்றைம்பது பரிவிராசகர்களுக்குத் தலைவனான சஞ்சயன் என்னும் பரிவிராசகன் ஒரு ஆராமத்திலே தங்கியிருந்தான். இராசகிருக நகரத்துக்கு அருகிலே உபதிஸ்ஸ கிராமம், கோவித கிராமம் என்னும் இரண்டு கிராமங்களுக்குத் தலைவர்களாக இரண்டு பிராமணர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்மகவு பிறந்தது. அக்குழந்தைகளுக்கு அக்கிராமத்தின் பெயரையே உபதிஸ்ஸன், கோலிதன் என்று குட்டினார்கள். இக்குழந்தைகள் வளர்ந்து இளமையிலேயே சாஸ்திரங்களைக் கற்றுத்தேர்ந்து இல்லற வாழ்க்கையை வெறுத்துச் சஞ்சயப் பரிவிராசகனிடஞ் சென்று சீடர்களாகி அவரிடம் துறவு பெற்றார்கள்.

ஆனால், இவ்விருவரும் சஞ்சயருடைய போதனையில் திருப்தியடையாமல் தமக்குள் இவ்வாறு பேசிக்கொண்டார்கள்: 'நாம் இருவரும் அமிர்த தருமத்தைத் தேடவேண்டும். அது யாருக்கு முதலில் கிடைக்கிறதோ அவர் மற்றவருக்குச் சொல்ல வேண்டும்." இவ்வாறு தமக்குள் தீர்மானித்துக்கொண்டு அவர்கள் பரதகண்டம் முழுவதும் சுற்றித்திரிந்து மீண்டும் இராசகிருத நகரத்துக்கு


  1. வெளுவனம் என்னும் வேணுவனம் என்றாலும் ஒன்றே. மூங்கில் வனம் என்பது பொருள்