பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12. தன் தூய்மை இயல்


அயலவர் பலர்க்கும் மேலாம்
அறமுரைப் பவன்தான் முன்னர்
மயல[1]றத் தன்னை மிக்க
மாண்புடை யவனாய்ச் செய்ய
முயலுதல் கடமை; பின்னர்
மொழியலாம் ஊர்க்கு நன்மை.
செயலதும் சொல்வ தேபோல்
செம்மையாய் இருத்தல் வேண்டும். 35

எவருமே தமக்குத் தாமே
இரும்பெருந் தலைவர் ஆவர்.
எவர்க்குமே வேறோர் மாந்தர்
எங்ங்னம் தலைவ ராவர்?
எவருமே தம்மைத் தாமே
இயற்கையாய் அடக்கி ஆளின்,
எவரும் எய்தல் ஒல்லா[2]
இனியநல் தலைமை ஏற்பர். 36

மணிகளுள் வைரம் மற்ற
மணிகளைச் சிதைத்தல் போல,
தனதுளந் தனிலே, தீமை,
தங்கிடத் தோன்றி மேலும்
இணையிலாப் பற்பல் தீங்கை
இழைத்திடச் செய்து, பின்னர்த்
தனதுவாழ் வினையே கல்லித்[3]
தகர்த்திடும், விழிப்பாய்க் காக்க 37

13

  1. 42
  2. 43
  3. 44