பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. கரும நியதி ஒ. பிக்குகளே1, இச்சா சக்தியை உபயோகித் தலையே (volition) கான் கருமம் என்று அழைக் கிறேன்.15 + மனிதன் தன் பாவ கருமத்தின் பிடியிலிருந்து தப்பவே முடியாது; தப்பித்துக்கொள்ளும் இடம் பரந்த வானத்திலும் இல்லை, ஆழ்ந்த கடலிலும் இல்லை, மலையின் குகைகளிலும் இல்லை. 품 மாலுவக் கொடி கடம்ப மரத்தைச் சுற்றிப் படர்ந்து மரத்தையே அமுக்கிவிடுவது போல், ஒருவனுடைய தீவினையே அவனை அமுக்கி விடுகிறது; பகைவர் செய்ய விரும்பும் தீமையை அவன் தானாகவே செய்து கொள்கிறான். 肇 இரும்பிலிருந்தே துரு தோன்றினும், அதை அது அரித்து விடுகிறது; அதுபோலவே (அறநெறி) பிறழ்ந்தவனை அவனுடைய கருமங்களே திய கதியில் கொண்டு சேர்க்கின்றன." o பிராணிகள் யாவும், முன் ஜன்மங்களிலும், இந்த ஜன்மத்திலும், செய்யும் செயல்களின் கருமப் பயனா லேயே இப்போதுள்ள நிலையில் இருக்கின்றன.” +