பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஞானம் காமமாகிய வெள்ளம் யாவர்க்கும் அபாயம் விளைவிக்கும்; உலகத்தையே அது அடித்துக் கொண்டு போய்விடுகின்றது. அதன் சுழல்களிலே சிக்கியவனுக்கு மீட்சிபெற வழியில்லை. ஆனால் ஞானம் என்னும் ஒடம் அந்த வெள்ளத்திலிருந்து காக்கும். ஆழ்ந்த தியானமே அதன் துடுப்பு." 를 தரும உபதேசங்களைக் கேட்டறிந்த ஞானிகள், ஆழமாயும் தெளிவாயும் அமைதியாயுமுள்ள ஏரியைப் போல், சாந்தியடைகிறார்கள். . 带 ஞானத்திற்கு உரிய (ஏழு) அங்கங்களில்* சித்தத்தை நிலைாகிறுத்தி, எதிலும் பற்று வைக்காமல், ஆசைகளை அடக்கி வென்று, எ வர்கள் மாசற்ற ஒளி மயமாய்த் திகழ்கிறார்களோ, அவர்கள் இந்த உலகிலேயே கிருவான மோட்சத்தை அடைகிறார்கள்." o உண்மையான ஞானத்தின் மூலம் விடுதலை பெற்றவனுடைய மனம் சாந்தியாயிருக்கும், சொல் சாந்தியாயிருக்கும், செயலும் சாந்தியாயிருக்கும்.'

  • ஏழு அங்கங்கள்-ஞானத்தை அடைவதற்குரிய ஏழு கருவிகள்: சாமர்த்தியம், ஞாபகம், மனனம், சாத்திர ஆராய்ச்சி, ஆனந்தம், சாந்தி, சமதிருஷ்டி என்பவை. இவை தனை லப்த போத்தியாங்கங்கள் என்பர்.