பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. நண்பர்கள் (சம்சார) யாத்திரையில், ஒருவன், தனக்கு நிகரான அல்லது மேலான நண்பன் துணைக்குக் கிடைக்கவில்லையானால், தன்னந்தனியே தொடர்ந்து செல்வானாக முடனுடைய துணை உதவியாகாது."

தீயோருடன் சேரவேண்டாம்; இழிந்தவருடன் இணங்க வேண்டாம்;ஒழுக்கமுள்ளவரோடு உறவாடுக, சான்றோர் தொடர்பை மேற்கொள்க."

  • }

மூடனுடன் குலாவுவோன் கெடுங்காலம் துன் புறுவான். மூடரோடு குலாவுதல், பகைவருடன் பழகு வதைப் போல, எப்போதும் துக்கந்தான். அறிவாளரின் இணக்கம், சுற்றத்தாரோடு பழகுவதைப் போல இன்பமே பயக்கும்." 부통 அறிவாளியாயும், உன்னோடு ஒத்துப் பழகக் கூடியவனாயும், அடக்கத்தோடு கல்லொழுக்கமுடைய வனாயும் ஒரு தோழன் கிடைப்பானாகில், எல்லா இடையூறுகளையும் கடந்து, அவனுடன் கருத்தோடும் மகிழ்ச்சியோடும் நட்புக் கொள்வாயாக."