பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை உலகில் தோன்றிய ஆறு தீர்க்கதரிசிகளும் ஆசியக் கண்டத்திலேயே அவதரித்தார்கள். சுமார் 3,000-ஆண்டு கட்கு முன் ஜாரதஷ்டிரர் பாரசீக நாட்டில் தோன்றினார். லாவோத்ஸ்ே, கன்பூஷஸ் இருவரும் சுமார் 2, 500 ஆண்டு கட்கு முன் சீன தேசத்தில் வாழ்ந்திருந்தனர். அதே காலத்தில் பாரத நாட்டில் வாழ்ந்திருந்த பெரியார் கெளதம புத்தர். புத்தருக்குப் பின்னால், இற்றைக்கு 1955 ஆண்டு கட்டு முன் பாலஸ்தீனத்தில் ஏசு கிறிஸ்து தோன்றினார். அவருக்கு பின் கி. பி. 632-ல் அரேபியாவில் நபிகள் நாயகம் அவதரித்தார். புத்தர் பெருமான் அவதரித்த ஆண்டு துல்லியமாக இன்னும் தீர்மானிக்கப் பெறவில்லை. பெரும்பாலான ஆசிரியர்கள் கி. மு. 563 என்று குறிப்பிட்டிருந்த போதிலும், கி.மு. 573 தான் சரியான ஆண்டு என்பதற்கு அவரி வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகளே ஆதாரமாயுள்ளன' புத்தர் தமது 29-ஆவது வயதில் அரண்மனையைவிட்டு வெளி பேறித் துறவு ஆண்டார். ஆறு ஆண்டுகள் அருந்தவம் புரிந்த பின், 35.ஆவது வயதில் அவர் பூரண ஞான மடைந்தார். அதன் பின் 45-ஆண்டுகள் வட இந்தியாவில் பல தலங்களுக்கும் நடந்து சென்று, அவர் தருமப் பிரசாரம் செய்துவந்து, இறுதியில் குே நகரில் மகா-பரி-நிருவான மடைந்தார். அவருடைய பிறப்பு, துறவு, மெய்ஞ்ஞானம், மகா-பரி- நிருவாணம் ஆகிய நான்கில் ஒவ்வொன்றும் வைகாசிமீ பூர்ணிமையன்றே ஏற்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்த நான்கு நிகழ்ச்சிகளுக்கும் பொருத்தமா யுள்ள ஆண்டு.கி.மு.573 ஒன்று தான். புத்தருடைய காலம் கி.மு. 573-493 என்பதை அறிஞர்களும், ஆசிரியர்களும்