பக்கம்:புத்த ஞாயிறு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்த ஞாயிறு.

வதற்கு, அத்தனே தாராள. மனமுள்ளவர்கள். இந்த தேசத்திலே இன்றுவரை எங்கே ஏற்பட்டிருக்கிரு.ர்கள்?"

வம்பு பேசுகிற இந்த உலகத்தின் கண்களில் எதுதான்

நியாயமாகப் பட்டிருக்கிறது?

குமாரகவி அவசரப்பட்டுஎதையாவதுபேசாதேபெண்ணே!

என்ன நடந்தது? எது உன் மனதை இப்படிச் சலனப். படுத்தியது? சொல்!

சுகுணு: எவ்வளவோ நடக்கிறது. இலைமறை காயாக யார்

யாரெல்லாமோ எதையெதையோ பேசுகிருர்கள். 'குமாரகவிஞர் ரொம்டப் பசையுள்ள ஆளோ இல்லையோ? அதனால்தான் இந்தக் குட்டி அந்தக்

குருடனை மயக்கி வளைக்கப்பார்க்கிருர்கள்' என்று: என் காதுபடவே பேசுகிரு.ர்கள்

(காரை ஓரமாகச் சற்று நிறுத்துகிருள். விம்முகிருள்.) தெய்வமே! உடனே என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு விடுங்கள். அல்லது நம்பிக்கை வாய்ந்த வேருெரு காரியதரிசியைத் தேடிக்கொண்டு என்னை

வெளியே அனுப்பிவிடுங்கள். என்னல் தானே உங்களை

இப்படிக் கன்னபின்னவென்று பேசுகிருர்கள்...?

குமாரகவி: (சற்று நீண்ட மெளனம்) ஆமாம் பெண்னே?

உன்னுடைய இடத்தை வேறு ஒருவரால் சுலபத்தில்

நிரப்பிவிட முடியாது. உன்னை இழப்பதற்குப் பயந்து,

உனக்காக என்னை நான் இழந்து விடலாமென்றுதான் தோன்றுகிறது. உன்னை மணப்பதற்குச் சம்மதிக்

கிறேன். ஆனாலும் இது மிகவும் பெரியதான ஒரு சுயநலம்தான். (சிரிக்கிருர்) - -

காட்சி-3 .

(சுகுளு மாடியில் நின்றவாறு வானப்பார்த்தபடி இருக்கிருள்(

வானத்தைக் கீறிக்கொண்டு சர்ர் என்று ஒரு விண்மீன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/100&oldid=597465" இலிருந்து மீள்விக்கப்பட்டது