இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புத்த ஞாயிறு
காட்சி-1 -
நேரம்-மாலை, இடம்:- பூம்புகார் நகர இந்திரவிகாரத்தின் கூடம். -
காவிரிப்பூம்பட்டினத்தின்-மிகப்பெரிய புத்த விகார மான இந்திர விகாரத்தின் உள்ளே ஒரு மாலை வேளை யில் கதை தொடங்குகிறது. விட்டு-விட்டு, மணி ஓசை. இடையிடையே முரசுகளின் மெல்லியஒலிகள்-தொலே தூரத்திலிருந்து கேட்பதுபோல் கேட்கிறது. புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம். சரணம் கச்சாமி-என்ற குரல்கள் (இனிய பண்பாடு வதை ஒத்த குரலில்) - அருகிலும், தொலைவிலும் மாறி மாறிக் கேட்கின்றன. இரு புத்தபிட்சுக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர். காட்சி
தொடங்குகிறது. 1y–1