108 புத்த ஞாயிறு:
காணிக்கையாக்குவது கொஞ்சம் கூட நன்முக இல்லை. தெய்வமே!
குமாரகவி மறுக்காமல் நான் சொல்வதை அப்படியே எழுதிக்கொள் சுகுணு! தயவு செய்து இதை மட்டும் மறுத்துப் பேசாதே. அன்று திராட்சைத் தோட்டம். தொடர்கதையைப் படியெடுத்து அச்சுக்குக் கொடுக்க யாருமே இல்லாமல் அது நின்று போயிருந்த நாளில், நீ என்னைத் தேடி வந்து எனக்குத் துணையாகி இரா விட்டால், இந்த நூலே இப்போது வெளிவர முடியாது அதனுல் இதைக் காணிக்கையாக்குவதற்கு உன்னை விடவும் பொருத்தமானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது பெண்ணே.
காட்சி-6
(இடம்: மணிமாலை ു. சு குளு அன்று வந்த கடிதங்களைப் பிரித்து ஆசிரியருக்குப் படித்துக் காட்டிக் கொண்டிருக்கிருள்) - " -
சுகுணு: இதோ ஓர் இனிய செய்தி...அரசாங்கத்திலிருந்து
வந்திருக்கிறது. -
குமாரகவி: படியேன்...ஏதாவது சு ற் ற றி க் ைக ய ா க.
இருக்கும்...
சுகுளு: இல்லை, தெய்வமே வெளிநாடுகளின் பண்பாட்டு உறவுகளைப் பரிமாறிக் கொள்ளும் பொருட்டு இந்திய அரசாங்கம் மூன்று பேர்களைத் தேர்வு செய்து ஐரோப் பிய நாடுகளுக்கு அனுப்புகிறதாம். அதில் தங்கள் பெயர் முதலாவதாக இருக்கிறது. -
குமாரகவி: வேண்டாம் என்று எழுதி விடு அம்மா! உடல் நிலை காரணமாக எனக்கு வசதிப்படவில்லை என்று.
பக்குவமாக அவர்களுக்குத் தெரிவித்து விடு சுகுணு.