பக்கம்:புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

IX வகையில் தான், புரட்சிக்கவிஞர். ஒப்பற்ற ஒரு பெருங் கவிஞராகப் போற்றிப் புகழ்ப்படுகிறார். கவிதைகள் சிறந்தனவாக உருவாகக் கவிஞனின் உள்ளத்திலிருந்து, சொற்கள், தாமே உருண்டோடி வந்து விழவேண்டுமேயல்லாது. கவிதைகளை உருவாக்கக் கவிஞன் சொற்களைத் தேடியலைந்து பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. சிறந்த கவிதைபற்றிய இலக்கணத்தைக் கூற வந்த புரட்சிக்கவிஞர். "சிறந்த சொற்களை உடன் அழைத்துக் கொண்டுவந்து, கவிதை. கவிஞன் உள்ளத்தில் தானே உருவாக வேண்டுமேயன்றிக், கவிஞன் 'நலிந்த சொற்களையெல்லாம் பொறுக்கி எடுத்துக், கவிதையை உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடாது. அருவியின் வீழ்ச்சிபோல நெஞ்சிலிருந்து கவிதை சலசலவென்று பெருகி உருவாக வேண்டும்" என்று குறிப்பிடுகிறார். கருத்தூற்று மழையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும்" என்பது புரட்சிக்கவிஞரின் நோக்கம். . எந்தக் கவிஞனிடத்தில் கற்பனை வளங்கள் சிறந்து விளங்கி, நயம்படக் காணப்படுகின்றனவோ, அவன்தான், புகழ்பெற்ற பெருங்கவிஞனாகத் திகழ முடியும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் உள்ளத்தில். இயல்புக்கற்பனை தலையாயக் கற்பனை - சார்நிலைக் கற்பனை ஆக்கக் கற்பனை -நினைவுக் கற்பனை படைப்புக் கற்பனை முருகியல் கற்பனை மறுபடைப்புக் கற்பனை தொடர்புக்கற்பனை ஆழ்நிலைக் கற்பனை - சிந்தனைக் கற்பனை -காட்சிக் கற்பனை - கேள்விக் கற்பனை - எடுத்து விளக்கும் கற்பனை கலவைக் கற்பனை . உயர்வு நவிற்சிக் கற்பனை போன்ற பல வளமான கற்பனைகள் பொதிந்து விளங்கிவந்ததன் காரணமாகத்தான். அவர், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞராகத் திகழும் பெற்றியினைப் பெற்றிருந்தார். வானத்தில். ஏழுவண்ணங்களை ஒழுங்குற ஒருங்கே இணைத்துக் கொண்டு, லானவில் அழகுறத் திகழ்வதைப் போல, சிறந்த கவிஞன் எட்டு உணர்வுகளை உள்ளத்தோடு ஒழுங்குற ஒருங்கே இணைத்துக் கொண்டு, கவிதைகள் உருவாக இடமளிக்க வேண்டியவனாக இருக்கிறான். அவன் உள்ளத்தில் எட்டு உணர்வு வட்டங்கள். ஒழுங்குற சுழன்று கொண்டேயிருக்கின்றன. 1. கவிஞனின் குறிக்கோள் 2. மொழிநயம் 3. ஓசை (இசை) நயம் 4. அணிநயம் 5. வெளிப்பொருளைப் புலப்படுத்தும் நயம் 2