பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 49 தாகக் கடல்" என்ற தலைப்பில் தம் கை வண்ணத்தைக் கவிதை வண்ணத்தைக் காட்டி நிற்கிறார். கடல் கடலை அறிமுகப்படுத்தும் கவிஞர் புது உவமையினைக் கையாளுகிறார். கல்வியை மறக்காத நெஞ்சங்கொண்ட வராகத் துலங்குகிறார். கடல் ஊருக்குக் கிழக்கே இருக்கிறது; அப்பெருங் கடலின் ஒரம் கீரியின் உடல் வண்ணம்போல் மணல் மெத்தை தென்படுகின்றது. அம்மெத்தை மேல் எழுந்து விழுந்து புரளும் அலைகள் கல்வி பயிலும் இளைஞர்கள் நெஞ் சம்போல் பூரிப்பால் ஏறும்; வீழும்; புரண்டிடும். ஊருக்குக் கிழக்கே உள்ள பெருங்கடல் ஒரமெல்லாம் கிரியின் உடல்வண் ணம்போல் மணல்மெத்தை, அம்மெத்தைமேல் நேரிடும் அலையோ, கல்வி கிலையத்தின் இளைஞர் போலப் பூரிப்பால் ஏறும்; வீழும் புரண்டிடும்; பாராய் தம்பி. -அழகின் சிரிப்பு: கடல் 1. அடுத்த பாடலில் மேலும் ஒர் உவமையைத் தருகிறார் கவிஞர். வெண்மைநிற அன்னக்கூட்டங்கள் விளையாடி விழ்வதைப் போலத் துள்ளித் துள்ளி அலையின் கரையின் மணல்மேல் சுழன்று வீசும் வெள்ளிய அலைகள் கரையைத் தொட்டுக் கடலுக்குள் சென்றுவிட்ட பிறகு, சிறுகால் நண்டுப் பிள்ளைகள் ஆடிஓடி விளையாடி மகிழ்ந்து காண்போர்க்கு வியப்பைச் சேர்க்கும். கடற்பரப்பைக் காண நெஞ்சம் மகிழும் கடலின் கண் கொள்ளாக் காட்சி களிப்பூட்டும். வடக்கும் தெற்கும்